Sunday, June 30, 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொருளாதாரத்தை பலமிழக்கச் செய்வதற்கு வழிவகுக்கும் இதற்கு ஒருபோதும் அனுமதியோம்! நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவிப்பு


கல்முனை உப பிரதேச செயலகத்தை
 தரமுயர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொருளாதாரத்தை பலமிழக்கச் செய்வதற்கு வழிவகுக்கும் இதற்கு ஒருபோதும் அனுமதியோம்!
நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் தெரிவிப்பு

கல்முனை வடக்கு தமிழ் உபபிரதேச செயலகத்தை தமுயர்த்துவது கல்முனையில் வாழும் முஸ்லிம்களை பெருமளவில் பாதிக்குமெனவும் எனவே பிரதேச செயலகத்தை விட்டுக் கொடுக்க முடியாதென திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக உருவாக்கத்தின் போது கல்முனை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் சம்மாந்துறை பத்ர் ஜும்ஆப் பள்ளிவாசலில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே - இந்நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொருளாதாரத்தை பலமிழக்கச் செய்து நமது தேசியத்தை சிதைப்பதற்கு வழிவகுக்கும்.

கல்முனை தென்கிழக்கின் முகவெற்றிலையாகும். முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டு காணப்படும் ஒரு வர்த்தக பூமியாகும். இதனை விட்டுக்கொடுக்க முடியாது. இவ்விவகாரத்தை முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைகளுள் ஒன்றாக கொண்டு சென்று நியாயமாக தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த பிரதேச செயலகத்தினை தரமுயற்த்துவதற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனினும், இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக தமிழ் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள எல்லையே இங்கு சர்ச்சையை ஏற்படுத்துகின்றது.

கல்முனையில் வாழும் 63 வீதமான முஸ்லிம்களின் முஸ்லிம்களின் கிராமங்கள், வர்த்தக நிலையங்கள், பஸார், பஸ்நிலையம், அரச நிறுவனங்கள், கடற்கரைப் பள்ளிவாசல், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, காணிகள் பெறுமதியான சொத்துக்கள் பலவந்தமாக இந்தப் பிரிவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தவிவகாரத்தை பௌத்த தேரர்கள் கையிலெடுத்து ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில் முஸ்லிம்களின் முன்மொழிவை ஒரு பிரகடமான வெளியீட்டு, நியாயமான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனவே, கல்முனை முஸ்லிம்களின் இந்த சாத்வீகப் போராட்டத்திற்கு அனைத்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களும், நாட்டில் வாழும் ஏனைய முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும். என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி .எம்.றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.. அஸீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.






தேசிய உடை அணிபவரே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும் கோத்தாவுக்கு எதிராக போட்டியிடத் தயார் – தெரண தொலைக்காட்சி விவாதத்தில் குமார வெல்கம


தேசிய உடை அணிபவரே
அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும்
கோத்தாவுக்கு எதிராக போட்டியிடத் தயார்
தெரண தொலைக்காட்சி விவாதத்தில்  குமார வெல்கம



கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத்  தயாராக இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்,
தெரண தொலைக்காட்சி விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

பதுளை மாவட்ட பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலிருந்து நான் நீக்கப்பட்டிருப்பதாக என்று கூறப்பட்டாலும், நான் ஒருபோதும் அந்தக்  கட்சியின் உறுப்பினராக இல்லாததால் அத்தகைய நடவடிக்கை தேவையற்றது.

தாம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெயரளவிலான பதவிகளை விட்டு விலகி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான அதிருப்தியினால், அப்போது நான் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்தேன்.

ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை சிறிலங்கா பொதுஜன பெரமுன எனக்கு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக, கோத்தாபய ராஜபக்ஸ இல்லாவிடின், மீண்டும் அந்தக்  கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன். ஆகஸ்ட் 11 ஆம் திகதி பெயரிடவுள்ள வேட்பாளரை நான் எதிர்க்கிறேன்

நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும், ஜனாதிபதியின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான உரிமை உள்ளது.

தேசிய உடை அணிபவரே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நானும் கூட தகுதியானவன் தான். அதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்புகிறேன்எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கு முடிவுக்கு வந்தது


முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கு
 முடிவுக்கு வந்தது


முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாக மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சந்தேக நபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான முத்தையா சகாதேவன் (வயது 62) என்பவர், கடந்த மாதம் 22 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமானார்.

மே 30 ஆம் திகதி சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரது மரணமானத்தற்குப் பின்னர், HC 42/26/2008 என்ற இலக்கமுடைய கதிர்காமர் கொலை வழக்கை தொடர்ந்து நடத்துவதில்லை என்று மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது,

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், குறிபார்த்துச் சுட்டதில் மரணமானார்.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மீது தாக்குதல்


கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலைக்கு முன்பாக
வீதியோரத்தில் தரித்திருந்த
 முச்சக்கரவண்டி மீது தாக்குதல்

வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை தரித்திருந்த கறுப்பு நிற முச்சக்கர வண்டி ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான முச்சக்கரவண்டியின் முன் கண்ணாடி உட்பட சில பொருட்கள் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு வந்த இனந்தெரியாத ஒருவர் வீதியோரத்தில் இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து முச்சக்கரவண்டியை தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் உரிமையாளர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாக்குதல் மேற்கொண்ட நபரை அடையாளம் கண்டு முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்குறித்த சம்பவமானது தனிப்பட்ட குரோதத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.




டாக்டர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் சீ.ஐ.டியினர் நாளை வெளியிடவுள்ள தகவல்


டாக்டர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி
தொடர்பில் சீ..டியினர் நாளை வெளியிடவுள்ள தகவல்



குருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சி..டி. தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை தொடர்ந்து 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பது நியாயமாக அமையாது என சி..டி. பாதுகாப்பு செயலாளர் ஜெனரால் ஷாந்த கோடேகொடவுக்கு நாளை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் இன்று பாதுகாப்பு செயலாளருக்கு குற்றப் புலனயவுப் பிரிவின் பனிப்பாளர் ஊடாக அறிவிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நான்காம் மாடி தகவல்கள் வெளிப்படுத்தின.

ஏற்கனவே ஷாபி வைத்தியருக்கு எதிராக சுமத்தப்படும் பயங்கரவாத, அடிப்படைவாத குற்றச்சாட்டுக்களுக்கோ சொத்துக் குவிப்பு மற்றும் கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களுக்கோ எந்த சாட்சிகளும் இல்லை என சி..டி. குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

எனினும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வைத்தியர் ஷாபி சி..டி. தடுப்பில் இருந்து வருகின்றார். இந் நிலையிலேயே அவரது தடுப்புக் காவல் நியாயமற்றது என அறிவிக்க சி..டி. நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

'IBC-தமிழா Toronto 2019 ' சுப்ரமணிய பிரபா இப்படி கூறுகின்றார்


'IBC-தமிழா Toronto 2019 '
சுப்ரமணிய பிரபா இப்படி கூறுகின்றார்

கனடா I.B.C தமிழா நிகழ்வுக்கு வந்தவங்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிப்பாங்களென்று பார்த்தா புட்டுக்கு மாவு குடுத்து விட்டிருக்காய்ங்க...

அதுக்கு முதல் முள்ளிவாய்க்கால்ல எங்கடா நெல்லு விளையுது அதை சொல்லுங்கடா...

ஆயிரம் கலைஞர்களை அறிமுகப்படுத்திறோம் என்று சொன்னிங்க அங்க போனா அரிசிமா பக்கெட் வித்திருக்கிறீங்க இதுக்கா அந்த பிரமாண்ட மேடை???

I.B.C தமிழாவில் விற்கப்பட்ட அரிசிமாவு மற்றும் மஞ்சள் பொடி பைக்கற்றுக்கள் எல்லாவற்றிலும் "முள்ளிவாய்க்காலில் இருந்து" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கு முள்ளிவாய்க்களில் மொத்தமாக 10 ஏக்கர் வயல்நிலம் கூட இல்லை அந்த நிலத்தில் மழையை நம்பி வருசத்துக்கு ஒரு முறை ஒன்று இரண்டு குடும்பம் நெல் விதைக்கும் அதுவும் இடையில் தண்ணி இல்லாமல் கருகியும் போகும் அப்பிடி இருக்க இந்த அரிசிமாவு எப்பிடி வந்திருக்கும்?

பெயருக்கு ஒரு மேடை போட்டு அதில் முள்ளிவாய்க்காலையும் சேர்த்து வித்திருக்கும் I.B.C பாஸ்கரன் நல்ல ஒரு வியாபாரி என்பதை நிறூபித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.
ஒரு மேடை ஆயிரம் சமையல் கலைஞர்கள் என்றதைத்தான் நாம பிழையா விளங்கிக்கொண்டமோ? சரி சரி ".பி.சி தமிழாவும் அரிசி மா பிட்டும்" என்றும் யாராச்சும் கட்டுரை எழுதுவாங்கதானே அப்ப பார்த்து தெரிஞ்சுகொள்ளுவம் .

சுப்ரமணிய பிரபா




தேர்தலில் ஐ.தே.கவே படுதோல்வியடையும்! மஹிந்த உறுதியாகக் கூறுகின்றார்


தேர்தலில் .தே.கவே படுதோல்வியடையும்!
மஹிந்த உறுதியாகக் கூறுகின்றார்


ஊழல், மோசடியால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த ஐக்கிய தேசியக் கட்சியினரை நாட்டு மக்கள் மறக்கவே மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே, விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக் கட்சி தான் படுதோல்வியடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தகுதியானவர்கள் எவருமே இல்லை. ஆனால், எமது அணிக்குள் பல பேர் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள்.

அதனால் தான் எமது அணிக்குள் வேட்பாளர் தெரிவில் சர்ச்சை நீடிக்கின்றது என வெளியில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் எமது அணி தனித்துப் போட்டியிடும் அல்லது கூட்டணியாகப் போட்டியிடும்.

இது தொடர்பில் எமது ஆதரவுக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எனினும், தேர்தல்களில் நாம் பலம் பொருந்திய - வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர்களையே களமிறக்குவோம்.

ஊழல், மோசடியால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த ஐக்கிய தேசியக் கட்சியினரை நாட்டு மக்கள் மறக்கவே மாட்டார்கள்.

எனவே, விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக் கட்சிதான் படுதோல்வியடையும். நாம் வென்றே தீருவோம். இது உறுதி.

நாம் ஆட்சிக்கு வந்ததும் அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம். தீவிரவாதத்தைக் கூண்டோடு இல்லாதொழிப்போம்.

பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம். ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஊழல், மோசடிக் குற்றவாளிகளைச் சிறைக்குள் தள்ளுவோம் என கூறியுள்ளார்

Saturday, June 29, 2019

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி புத்தளம் மாவட்ட எம்.பி ஒருவரின் மகனால் தாக்கப்பட்டாராம்!!


பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்
வைத்தியசாலையில் அனுமதி
புத்தளம் மாவட்ட எம்.பி ஒருவரின்
மகனால் தாக்கப்பட்டாராம்!!


ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகரவின் மகன் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதில் பிரமுகர்களின் பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரமுகர்கள் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சுசந்த அருண குமார என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் மகனைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள தாம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகரவும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் இதுகுறித்த முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.