Saturday, June 1, 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ் விஜயம் முற்றவெளியில் இன்று காலை முதல் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படும் மக்கள் !


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ் விஜயம்
முற்றவெளியில் இன்று காலை முதல் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படும் மக்கள் !

ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய யாழ்ப்பாண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் யாழ் முற்றவெளிக்கு வெளியில் வைத்து தீவிர சோதனைகளின் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்பு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் முற்றவெளியில் இன்று நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் கலந்து கொண்டு மக்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளார்.நிகழ்வில் கலந்து கொள்ள வந்த மக்கள் அனைவரும் முற்றவெளிக்கு வெளியில் வைத்து பொலிஸாரால் ஒவ்வொருவராக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.மேலும் பொதிகள் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.




No comments:

Post a Comment