Monday, July 1, 2019

மாலைதீவு சென்றார் மஹிந்த!



மாலைதீவு சென்றார் மஹிந்த!



எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மாலைதீவுக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
                                                    
இன்று பிற்பகல் கொழும்பிலிருந்து புறப்பட்ட அவர் மூன்று நாட்கள் மாலைதீவில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.

இந்த நாட்களில் அந்நாட்டு அரசியல் பிரதிநிதிகளையும் மஹிந்த சந்திப்பார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளை, இலங்கையில் மரண தண்டனை குறித்த காரசாரமான அரசியல் பேச்சுக்கள் மற்றும் தேர்தல் நகர்வுகள் நடைபெற்றுவரும் பரபரப்பான சூழலில் மஹிந்தவின் இந்த திடீர் பயணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

No comments:

Post a Comment