Wednesday, July 3, 2019

உங்களோடு கைகோர்த்து நிற்கின்றோம். சாய்ந்தமருது – மாளிகைக்காடு பளிவாசல்களின் தலைவர் வை எம்.ஹனிபா ஹரிஸ் எம்.பியிடம்.....


உங்களோடு கைகோர்த்து நிற்கின்றோம்.
 சாய்ந்தமருதுமாளிகைக்காடு பளிவாசல்களின்
தலைவர் வை எம்.ஹனிபா
ஹரிஸ் எம்.பியிடம்.....



சாய்ந்தமருது – மாளிகைக்காடு பளிவாசல்களின் தலைவர் வை எம்.ஹனிபா அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்கள் சந்தித்தபோது பளிவாசல்களின் தலைவர் வை எம்.ஹனிபா ஹரிஸ் எம்.பியிடம் எதனைத் தெரிவித்தார்? என்ன பேசினார்?

பளிவாசல்களின் தலைவர் வை எம்.ஹனிபா தெரிவித்ததாவது,

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிக் கோரிக்கையை சாய்ந்தமருது மக்கள் கைவிட்டு விடவில்லை. அது நிறைவேறும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சாய்ந்தமருது மக்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு இப்பிரதேச மக்களின் பிரதிநிதியாகிய நீங்களே  தடையாக இருப்பதாக இங்குள்ள மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் இந்த நம்பிக்கை தவறானது என்பதை நிருபிப்பதற்கு சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நீங்கள் துரிதமாக நிறைவேற்றிக் கொடுத்து அவர்களின் எண்ணத்தை போக்க வேண்டும்.

சாய்ந்தமருது மக்களின் நியாயமான இந்த கோரிக்கை உங்கள் மூலம் நிறைவேற்றப்படின்  உங்களை இந்த மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.

கல்முனையில் பிரச்சினைகள் எழும்போது கல்முனை வேறு, சாய்ந்தமருது வேறு என்றில்லாமல் சாய்ந்தமருது மக்கள் கல்முனை மக்களுடன் ஒன்றினைந்து நீதி, நியாயத்திற்காக போராடவும் தயங்கமாட்டார்கள்.

எனவே, சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உங்களால்தான் முடியும். அதனை நிறைவேற்றி சாய்ந்தமருது மக்களின் நல்லெண்ணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களோடு கைகோர்த்து நிற்கின்றோம்.





No comments:

Post a Comment