Tuesday, July 2, 2019

சவூதி விமானநிலையம் மீது தொடர் தாக்குதல்! ஒன்பது பேர் காயம்



வூதி விமானநிலையம் மீது 
தொடர் தாக்குதல்!

ஒன்பது பேர் காயம்


சவூதி அரேபியாவின் அபஹா சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 00:30 மணியளவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் எட்டு சவூதி பிரஜைகளும் ஒரு இந்தியரும் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக சவூதி படைத்தரப்பு செய்தி வெளியிட்டிருக்கின்றது.
                                                           
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரபப்ட்டு, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள படைகளின் பேச்சாளர். கேணல் ரேக்கி அல் மலிக் -சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் தாக்குதல் தொடர்பில் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment