Friday, August 2, 2019

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு 12 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொழும்பு பெரிய பள்ளிவாயல் அறிவிப்பு


இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு
12 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்
கொழும்பு பெரிய பள்ளிவாயல் அறிவிப்பு



இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 12 ஆம் திகதி என கொழும்பு பெரிய பள்ளிவாயல் அறிவித்துள்ளது.

துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று (02) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலும் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டுள்ளதனால், துல்கஃதா மாதத்தை 29 ஆக நிறைவு செய்வதாகவும் பிறைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை முஸ்லிம்களுக்கு புனித அரபா தினம் 11 ஆம் திகதி அமையவுள்ளதாகவும் பிறைக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment