Saturday, August 31, 2019

ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? மற்றுமொரு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது


ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்?
மற்றுமொரு கருத்துக்கணிப்பு 
முடிவுகள் வெளியானது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார்? வெற்றிபெறுவார் என்பது குறித்து Green University மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் குறைந்த வாக்குகளையே பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச 17 வீதமான வாக்குகளையே பெற்றுக்கொள்வார் என அந்த கணக்கெடுப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

900 மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் கோத்தபாய ராஜபக்ஸ 59 வீதமான வாக்குகளை பெற்றுள்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துகணிப்பின் முடிவுகளும் வெளியாகியிருந்தன.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை தோற்கடிக்க முடியுமான ஒரேயொரு வேட்பாளர் சபாநாயகர் தேசபந்து கரு ஜெயசூர்யவே என்று பேராதனை பல்கலைக்கழகம் செய்த மக்கள் கருத்துக் கணிப்பிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் கணிப்பீட்டில் கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் இணைக்கப்பட்டு இந்த கணிப்பு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய நாடு, இனம் மற்றும் மதம் ஆகிய உணர்வு கொண்ட மற்றும் அவை குறித்த நம்பிக்கை வைக்கக் கூடிய சிரேஷ்ட அனுபவம் கொண்ட ஒரே ஒருவர் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவே என்று கணிப்பீட்டில் தெரிவந்துள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்கினால் அதன் இலாபம் கோட்டாபய ராஜபக்ஸவை விடவும் ஜே.வி.பி யின் அனுர குமார திஸாநாயக்கவுக்கே சேரும் என்று அந்த ஆய்வில் கண்டுப்பிடிக்கபட்டுள்ளது




No comments:

Post a Comment