Monday, September 30, 2019

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் சக்தி எது? அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு



நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும்
போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் சக்தி எது?
அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் பின்னணியில் ராஜபக்ஸர்கள் உள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களை பணயமாக வைத்து தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எவரையும் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் 20 நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்திற்கு பின்னால் இருந்த சக்தி நேற்று வெளியாகியது.

நான் இராணுவத்தினரின் பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்று அவர்களின் கோரிக்கை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன் எனறு கூறி அந்த உண்ணாவிரத்தை முடித்து வைத்தேன்.

நான் சென்று சற்று நேரத்தில் எதிர்தரப்பினரும் அவ்விடத்திற்கு சென்றனர். இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என இதன் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு வொக்ஷோல் வீதியில் தமது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தை திறந்து வைத்ததன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.






No comments:

Post a Comment