Wednesday, October 30, 2019

1 ஏக்கர் 40 பர்சஸ் பரப்பளவு காணியை கண்டி வைத்தியசாலைக்கு வக்பு செய்த கண்டி 'முஸ்லிம் ஹோட்டல்' குடும்பத்தார்




1 ஏக்கர் 40  பர்சஸ் பரப்பளவு காணியை
கண்டி வைத்தியசாலைக்கு வக்பு செய்த
கண்டி 'முஸ்லிம் ஹோட்டல்' குடும்பத்தார்

கண்டி போதனா வைத்தியசாலை, இன்று முதல் இலங்கையின் இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, மத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது விஷேட  நிகழ்வாக, ஒரு முஸ்லிம் குடும்பத்தினரால், தமக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கரும் 40  பர்சஸ் பரப்பளவு காணியை வைத்தியசாலை உபயோகத்துக்காக அரசாங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்தக் காணி, கண்டி பிரதான நகரில் அமைந்துள்ள 'முஸ்லிம் ஹோட்டல்' உரிமையாளர்களுக்கு  சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.







No comments:

Post a Comment