Tuesday, October 1, 2019

சிங்கப்பூர் பிரஜை கையொப்பமிட்ட ரூபா நோட்டுகள் செல்லுபடியாகுமா ? பந்துல குனவர்தன வழக்கு தாக்கல் 56 மாதங்களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சந்தேகம்


சிங்கப்பூர் பிரஜை கையொப்பமிட்ட
ரூபா நோட்டுகள் செல்லுபடியாகுமா ?
பந்துல குனவர்தன வழக்கு தாக்கல்
56 மாதங்களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சந்தேகம்



சிங்கப்பூர் பிரஜையான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கையொப்பமிட்ட ரூபா நோட்டுகள் செல்லுபடியாகுமா ?  என கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர் பந்துல குனவர்தன மேல் முறையீட்டு நீதிமன்றில் செய்துள்ளார்.

நோட்டுகள் வெளியிடப்பட்டு 56 மாதங்களுக்குப் பின்னர் எதிர்கட்சி உறுப்பினர் பந்துல குனவர்தனவுக்கு இந்த சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் கல்லூரி நண்பரான அர்ஜுன மஹெந்திரனை நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ரனில் விக்ரமசிங்க ஆளுநரக நியமித்திருந்தார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் பிரதான சந்தேக அவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment