Thursday, October 31, 2019

‘நாற்காலி’ சின்னத்தில் 17 கட்சிகளின் கூட்டணி – கோத்தா தலைமை? மஹிந்தவும், மைத்திரிபாலவும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை


நாற்காலிசின்னத்தில்
17 கட்சிகளின் கூட்டணி
கோத்தா தலைமை?
மஹிந்தவும், மைத்திரிபாலவும்
நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை

2020 நாடாளுமன்றத் தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவதற்காக, பொதுஜன பெரமுனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, 17 கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன.

சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில், உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியின் புரிந்துணர்வு உடன்பாடு கொழும்பில் நேற்று கையெழுத்திடப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் முன்னிலையில், இந்த உடன்பாட்டில், 17 கட்சிகளின் செயலாளர்கள் கையெழுத்திட்டனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, லங்கா சமசமாசக் கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,  உள்ளிட்ட 17 கட்சிகள் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜிஎல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எனினும், இந்த புதிய கூட்டணியின் இணைத் தலைவர்களாக பெயரிடப்படவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படும், மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.





யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை எதிர் வரும் 10 ஆம் திகதி ஆரம்பம்


யாழ்ப்பாணம்சென்னை விமான சேவை
எதிர் வரும் 10 ஆம் திகதி ஆரம்பம்



சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான வணிக விமான சேவைகள், வரும் 10ஆம் திகதி தொடக்கம் இடம்பெறவுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், எச்எம்சி நிமலசிறி,

அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு அமைய விமான சேவைகள் ஆரம்பமாகும். பகல் நேர விமான சேவை மாத்திரம் இடம்பெறும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான ருவழி விமானப் பயணக் கட்டணமாக, 15, 690 ரூபாவும், சென்னை-யாழ்ப்பாணத்துக்கான ஒரு வழி விமான கட்டணமாக, 7,879 ரூபாவும் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயண நேரம் 32 தொடக்கம் 50 நிமிடங்களாக இருக்கும்என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விமானப் பயணங்களுக்கான பயணச் சீட்டுகளை  குறித்த விமான நிறுவனங்களின் இணையத்தளங்களின் மூலமாகவும், முகவர்கள் மூலமாகவும் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 147 தபால் மூல வாக்களிப்பு நிலையங்கள்! மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா தெரிவிப்பு


வவுனியாவில் 147 தபால் மூல
வாக்களிப்பு நிலையங்கள்!
மாவட்ட அரசாங்க அதிபர்
.எம். ஹனீபா தெரிவிப்பு



வவுனியா மாவட்டத்தில் 147 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறுவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான .எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 5038 அஞ்சல் வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றது.

அதில் 4140 அஞ்சல் வாக்காளர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் வெளிமாவட்டத்திற்கு 147 அஞ்சல் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 147 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மூலம் 147 வாக்கெடுப்பு நிலையங்களில் இவ் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவற்றுக்காக 47 உதவி தெரிவு அத்தாட்சி அலுவலர்களும், 142 தேர்தல் கண்காணிப்பாளர்களும் ஒவ்வொரு நிலையங்களிலும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அஞ்சல் வாக்களிப்பு இன்றும் இடம்பெறவுள்ளது. அத்துடன் வாக்களிக்க தவறியவர்கள் வருகின்ற 7ம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வாக்களிக்க முடியும்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்வரும் 4 மற்றும் 5ம் திகதி அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

`அவர்கள் இருவரையும் முந்திவிட்டாள்!' - 3வது குழந்தையின் எடையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்


`அவர்கள் இருவரையும் முந்திவிட்டாள்!'
- 3வது குழந்தையின் எடையைக் கேட்டு
அதிர்ச்சியடைந்த பெற்றோர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த டேனியல் - எம்மா மில்லர் தம்பதிக்கு, 5.8 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்திருக்கிறது. 'குழந்தை இப்போதும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை.

பிறக்கும் முன்பு குழந்தையின் எடை அதிகமிருக்கும் எனத் தெரிந்திருந்தாலும்கூட, எடை இவ்வளவு அதிகமிருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

தாயால் இதற்கு மேல் எடையைத் தாங்க முடியாது என்பதால், `எமெர்ஜென்சி கேர்' என்ற அடிப்படையில் அவசர சிகிச்சையாக சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ள எம்மா மில்லர், "எங்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களும்கூட, சராசரியான குழந்தையின் எடையைவிட அதிக எடையில்தான் பிறந்திருந்தார்கள். நான்கு வயதாகும் எங்களின் மூத்த மகன் ஏஸ் (Ace) 3.8 கிலோ எடையுடனும், இரண்டு வயதாகும் மகள் வில்லோ (Willow) 5.5 கிலோ எடையுடனும் பிறந்திருந்தனர். இவள், அவர்கள் இருவரையும் முந்திவிட்டாள்" என்று தெரிவித்துள்ளார்.

எம்மாவின் கர்ப்பத்தில், 35-வது வாரத்தின் முடிவில், `நான்கு கிலோவுக்கு மேல் குழந்தையின் எடை இருக்கிறது' என அல்ட்ரா சவுண்டில் தெரிய வரவே, அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர் மருத்துவர்கள். பிறக்கும் முன்பு குழந்தையின் எடை அதிகமிருக்கும் எனத் தெரிந்திருந்தாலும்கூட, எடை இவ்வளவு அதிகமிருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர். பெற்றோருக்கும் இது இன்ப அதிர்ச்சிதான்!

குழந்தை தற்போதைக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் நலமுடம் திரும்புவாள் என்றும், பத்திரிகைகளிடம் தெரிவித்துள்ளனர், டேனியல் - எம்மா தம்பதி.




123-வது பிறந்த நாளை கொண்டாடியவர் - உலகிலேயே வயதான பெண் மரணம்


123-வது பிறந்த நாளை கொண்டாடியவர்
- உலகிலேயே வயதான பெண் மரணம்

உலகிலேயே வயதான பெண் என்ற புகழுக்கு சொந்தக்காரரான தான்சிலியா பிசம்பேயவா காலமானார்.

ஸ்யாவின் அஸ்ட்ராஜன் பிராந்தியத்தில் உள்ள இஸ்லமாசி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான்சிலியா பிசம்பேயவா. 123 வயதான இவர், உலகிலேயே வயதான பெண் என்ற புகழுக்கு சொந்தக்காரர். 1896-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் திகதி பிறந்த இவர், கடந்த மார்ச் மாதம் தனது 123-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

4 குழந்தைகளின் தாயான அவர், தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். பிசம்பேயவாவுக்கு 10 பேரக்குழந்தைகள், 15 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். 3 நூற்றாண்டுகளை கண்ட அவர் இறந்துவிட்டதாக ஸ்யா அறிவித்துள்ளது.

பிசம்பேயவாவின் சாதனையை முறியடித்து வாழ்ந்த பெண்ணும் ஸ்யாவை சேர்ந்தவரே. அங்குள்ள கபார்டினோ பால்கரியாவை சேர்ந்த 127 வயதான நானு ஷாவோவா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு! பல உறுதிமொழிகள் முன்வைப்பு


சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
பல உறுதிமொழிகள் முன்வைப்பு

நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் செய்து கொள்ளப்படும் எந்த உடன்பாட்டுக்கும் நான் கட்டுப்படவில்லை, இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் உடன்பாடு குறித்து கவனம் செலுத்தி அதில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
                                                  
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியில் வைத்து இன்றையதினம் வெளியிடப்பட்டது.

இதன்படி, தனது விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகளை அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சஜித் பிரேமதாச சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் குறிப்பிடுகையில், புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதும், எல்லா இருதரப்பு உடன்பாடுகளையும் மீளாய்வு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதில் .தே. தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், ஆகிய வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.





வெளிநாட்டில் இருந்து வருகைதரும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்


வெளிநாட்டில் இருந்து வருகைதரும்
வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு
கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்

வெளிநாட்டில் இருந்து வருகைதரும் வாக்காளர்கள்  வாக்களிப்பதற்கு கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் தமது வாக்கை அளிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்துள்ள வாக்காளர்கள் வாக்களிக்கும் போது கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு;




பாகிஸ்தானில் புகையிரதம் தீப்பிடித்ததில் 73 பேர் பலி 40 பேர் படுகாயம்



பாகிஸ்தானில் புகையிரதம் தீப்பிடித்ததில்
73 பேர் பலி 40 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் புகையிரதமொன்று தீப்பிடித்ததில் 73 பயணிகள் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
                                                                           
பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து ராவல்பிண்டி நோக்கிப் பயணித்த புகையிரதத்திலேயே தீ பரவியுள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காலை உணவை பயணிகள் சிலர் தயாரித்த வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ பரவியதாக, ரயில்வேதுறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமட் தெரிவித்துள்ளார்.

தீப்பிடித்து எரியும் புகையிரதத்திலிருந்து குதிக்க முற்பட்டபோது, பலர் உயிரிழந்துள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.