இன்று கைது
செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர்
பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை
கட்டாய
விடுமுறை வழங்கப்பட்டுள்ள
பொலிஸ் மா
அதிபர் பூஜித்
ஜயசுந்தர குற்றப்
புலனாய்வு பிரிவினரால்
இன்று (01) கைது செய்யப்பட்டார்.
கடந்த
2017 ஆம் ஆண்டு
பொலிஸ் தலைமையக
மின்தூக்கி இயக்குனரை தாக்கிய சம்பவம் தொடர்பில்
அவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக
பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது
செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில்
முற்படுத்தப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபாய் சரீர
பிணையில் அவரை
விடுதலை செய்வதாக
கொழும்பு கோட்டை
நீதவான் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment