Thursday, October 31, 2019

சந்திரிக்காவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு


சந்திரிக்காவின் புதல்வர்
விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடத்த உள்ள மாநாட்டின் மூலமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டு வரும் திட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் மாநாடு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் யோசனை மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ளது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் இணை தலைவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.





No comments:

Post a Comment