Monday, October 28, 2019

அரசியல் செயற்பாடு குறித்து மைத்திரியின் திடீர் முடிவு தொடர்ந்தும் செயற்படப் போவதாக தெரிவிப்பு


அரசியல் செயற்பாடு குறித்து
மைத்திரியின் திடீர் முடிவு
தொடர்ந்தும் செயற்படப் போவதாக தெரிவிப்பு



அரசியலில் தான் தொடர்ந்தும் செயற்படப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஓய்வில் இருப்பதனை விடவும் செயற்பாட்டு அரசியலை விருப்புவதாக தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை வெளியிட்ட ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானுக்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியிருந்தார். அதன் பின்னர் அவர் இந்த டுவிட்டர் பதிவை பதிவிட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தான் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய சிறிலங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டார்.

எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செயற்பாட்டு அரசியலில் மீண்டும் நுழையவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment