Wednesday, November 27, 2019

வீதி பாதசாரி கடவைகளை பயன்படுத்தாத பாதசாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை


வீதி பாதசாரி கடவைகளை பயன்படுத்தாத
பாதசாரிகளை சட்டத்தின் முன்
நிறுத்த நடவடிக்கை



பெருந்தெருக்களில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்காக வீதி பாதசாரி கடவையை பயன்படுத்தாமல் வீதியை கடக்க முயலும் பாதசாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதற்கு அமைவாக பாதசாரி கடவையை பயன்படுத்தாது வீதியின் குறுக்காக பயணிக்கும் பாதசாரிகளை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்பொழுது பாதசாரிகளுக்கு வீதி கடவைகளை பயன்படுத்துவதற்கான ஆலோசனை வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று வீதி பாதுகாப்பு மற்றும் மோட்டார் வாகன பிரிவு பொறுப்பு அதிகாரி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் எஸ் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதசாரிகளுக்கு பாதசாரி கடவைகளில் செல்லக்கூடிய வகையில் பாதசாரி கடவைகள் தற்பொழுது தயார் செய்யப்பட்டு வருகின்றன. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வீதி கடவைகளில் உள்ள பெயரை விரைவாக அந்த இடத்தில் ஸ்தாபிப்பதற்கான பணிகளும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக டெல்லியில் வைகோ போராட்டம்


ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக
டெல்லியில் வைகோ போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபயவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று டெல்லியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கறுப்பு கொடி அணிந்து வைகோ குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இன்றையதினம் இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது







தப்பியோடிய CID உயர் அதிகாரி நிஷாந்தவை நாடு கடத்த சுவிஸ் அரசாங்கம் மறுப்பு


தப்பியோடிய CID உயர் அதிகாரி நிஷாந்தவை
நாடு கடத்த சுவிஸ் அரசாங்கம் மறுப்பு



குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரியான நிஷாந்த சில்வாவை இலங்கைக்கு நாடு கடத்த முடியாதென சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் சட்டத்திட்டத்திற்கு அமைய அவரையும் அவரது குடும்பத்தினரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பு மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிஷாந்த சில்வாவுக்கு எதிராக இன்டர்போல் பிடியாணை இல்லாமையினால் அவருக்கு எதிராக செயற்படுவதற்கு சுவிஸ் பொலிஸாருக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று நிஷாந்த சில்வாவை சந்தித்து லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜுடீன், கீத் நோயார், எக்னெலிகொட, உபாலி தென்னகோன் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

நிஷாந்த சில்வா சமர்பித்த ஆவணங்களுக்கு அமைய சுவிஸ் அதிகாரிகள், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நிஷாந்தவின் அரசியல் பாதுகாப்பு விண்ணப்பம், சூரிச் நகரின் புலம்பெயர்ந்தோர் நிலையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர், நிஷாந்த சில்வா தனது குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


නිශාන්ත පිටුවහල් කිරීමට ස්විස් රජය බැහැ කියයි
අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ සමූහ මංකොල්ල අංශයේ ස්ථානාධිපති පොලිස් පරීක්ෂක නිශාන්ත සිල්වා මෙරටට පිටුවහල් කිරීම ස්විස් රජය රතික්ෂේප කර ඇත.

ස්විස් නඩු අධ්යක්ෂ කාර්යාලයේ ආරංචි මාර්ග පැවසුවේ ස්විස් නීති රීති අනුව ඔහු සහ පවුලේ් අය ආපසු ශී ලංකාවට එවීම තහනම් බවයි.

නිශාන්ත සිල්වාට එරෙහිව ඉන්ටර්පෝල් වරෙන්තුවක් නැති නිසා ඔහු ගැන කිරයා කිරීමට ස්විස් පොලිසියට නීතිමය බලයක් නැතැයි එම ආරංචි මාර්ග ඊයේ (27 දා* පැවසීය.

මේ අතර ජිනීවා ආරංචි මාර්ග සඳහන් කළේ මානව හිමිකම් කවුන්සිලයේ විමර්ශන නිලධාරීන් පිරිසක් ඊයේ නිශාන්ත සිල්වා හමුවී ලසන්ත විකරමතුංග, රගර් කීරඩක තාජුඞීන්, කීත් නොයාර්, එක්නැලිගොඩ, උපාලි තෙන්නකෝන් යන අයට අදාළ සිදුවීම් ගැන පැය 3 ක් තිස්සේ තොරතුරු ලබාගත් බවයි.

ස්විස් බලධාරීන් නිශාන්ත සිල්වා ඉදිරිපත් කළ කරුණු අනුව ඔහුට සහ පවුලේ අයට එරට දේශපාලන රැුකවරණ ලබා දීමට තීරණය කර ඇත.

ඔහුගේ දේශපාලන රැුකවරණ අයැදුම්පත සුරිච් නුවර සංකරමණික මධ්යස්ථානය වෙත ඉදිරිපත් කර තිබේ.

කීර්ති වර්ණකුලසූරිය


ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு பயணம்


ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு பயணம்



இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று  (28) நண்பகல் இந்தியாவிற்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேவேளை மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக கோத்தாபய ராஜபக்ச இன்று மாலை புதுடெல்லி வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளை காலை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச முதலில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் இலங்கை ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படும். அத்துடன் மகாத்மா காந்தியின் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்துவார்.

இதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேசவுள்ளார். இதையடுத்து இரு நாடுகளின் தலைவர்களும் ஊடகங்களுக்கும் அறிக்கைகள் வெளியிடுவர்.





சிவலிங்கம், மஸ்தான்,இராமநாதன் . வியாழேந்திரன் உள்ளிட்டோரும் மாவட்ட இணைப்புக் குழு தலைவர்கள்


சிவலிங்கம், மஸ்தான்,இராமநாதன் .
வியாழேந்திரன் உள்ளிட்டோரும்
மாவட்ட இணைப்புக் குழு தலைவர்கள்



நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்..வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல், அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள், இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

20 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்


20 அமைச்சுக்களுக்கு
புதிய செயலாளர்கள் நியமனம்



புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,

எஸ்.எம் மொஹமட் - சுற்றாடல் மற்றும் விமான சேவைகள்

ஆர்.டபுள்யூ.ஆர் பேமசிறி - வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்

ஜே.ஜே ரத்னசிறி - நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்

ரவிந்திர ஹேவாவித்தாரண - பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்

ஜே.ஏ ரஞ்சித் - கைத்தொழில் மற்றும் வழங்கள் முகாமைத்துவம்

டீ.எம்.ஏ.ஆர்.பி திசாநாயக்க - உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்

எம்.எம் காமினி செனவிரத்ன - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்

டபுள்யூ.ஏ சூலாநந்த பெரேரா - தகவல் தொலைத் தொடர்பு

வசந்த பெரேரா - மின்சக்தி மற்றும் வலுசக்தி

எம்.எம்.பி.கே மாயாதுன்ன - துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து

எஸ். ஹெட்டியாரச்சி - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

ஆர்.பி ஆர்யசிங்க - வெளிநாட்டு உறவுகள்

ஏ.எஸ்.எம்.எஸ் மஹனாம - மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு

ஜே.எம்.சி ஜயந்தி விஜேதுங்க - சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள்

ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி

எம்.பீ.டீ.யூ.கே மாபாபத்திரண - கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு

ஆர்.எம்.ஐ ரத்னாயக்க - கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள்

பீ.எஸ்.எம் சால்ஸ் - சுகாதார மற்றும் சுதேச வைத்தியம்

என்.பி மொன்டி ரணதுங்க - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி

பேராசிரியர் பிரியத் பந்து விக்ரம - நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி

மாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களின் தலைவர்கள்


மாவட்டங்களுக்கான
இணைப்புக்குழுக்களின் தலைவர்கள்




ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 16 மாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களுக்கான தலைவர்களை நியமித்துள்ளார்.


இந்தக்குழு ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆலோசனை சபையாக இயங்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி,


கொழும்பு- விஜயதாஸ ராஜபக்ச
கம்பஹா- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே
பியால் நிசாந்த- களுத்துறை
சரத் அமுனுகம- கண்டி
லச்மன் வசந்த- மாத்தளை
முத்து சிவலிங்கம்- நுவரெலியா
சந்திம வீரக்கொடி- காலி
நிரோசன் பிரேமரட்ன- மாத்தறை
அங்கஜன் ராமநாதன்- யாழ்ப்பாணம்
காதர் மஸ்தான்- மன்னார்
வியாழேந்திரன்- மட்டக்களப்பு
சிரியானி விஜேவிக்கிரம - அம்பாறை
வீரக்குமார திஸாநாயக்க- அநுரதப்புரம்
தேனுக விதானகமகே- பதுளை
சுரதி துஸ்மந்த- கேகாலை
தினேஸ் கன்கந்த- ரத்தினபுரி

வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்! வெளியானது அறிவிப்பு


வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்!
வெளியானது அறிவிப்பு


வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்தும், வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவியேற்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நாளை 29ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கான முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். இதன்போது வடக்கு மாகாணத்தின் ஆளுநரையும் உடன் அழைத்துச் செல்வார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே தற்போது ஆளுநர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது