Wednesday, November 27, 2019

பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரக ஜீ.எல்.பீரிஸ்




பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரக ஜீ.எல்.பீரிஸ்



முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வெளிவிவகாரங்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சர் உட்பட பல அமைச்சு பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராகவும் செயற்பட்டு வருகிறார்.


No comments:

Post a Comment