Sunday, January 19, 2020

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பெண்கள் விடுதி கையளிப்பு நிகழ்வும் ஊழியர்கள் கௌரவிப்பு விழாவும்!!


சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை
 பெண்கள் விடுதி கையளிப்பு நிகழ்வும்
ஊழியர்கள் கௌரவிப்பு விழாவும்!!

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் முயற்சியில் பீப்பல்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பீ . எல் . சி நிறுவனத்தின் அல் - ஸபா இஸ்லாமிய நிதிப் பிரிவு கல்முனை கிளை ஊடாக அந்நிறுவனத்தின் சமூக கூட்ட பொறுப்புடமை ( Corporate Social Responsibility - CSR Project ) நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பெண்கள் விடுதி கையளிப்பு நிகழ்வு நேற்று 2020.01.19 மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வுடன் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தகர்கள் பாராட்டு நிகழ்வும் நடைபெற்றது.

வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழு பிரதி தலைவர் வைத்தியர் சனூஸ் காரியப்பர் தலைமை வைகித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி . ஜீ . சுகுணன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் . எல் . எம் . மிஹ்ளார் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வைத்தியதுறைக்கு தம்மை அர்ப்பணித்த உத்தியோகத்தர்கள், ழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.









No comments:

Post a Comment