பண்டிகைக் காலத்தை முன்னிட்டு
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
பண்டிகைக்
காலத்தை முன்னிட்டு,
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளைக்
குறைப்பதற்கு, கைத்தொழில் மற்றும்
வர்த்தக அமைச்சு
தீர்மானித்துள்ளது.
இதன்
பிரகாரம், தற்போது
65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வௌ்ளைப் பச்சையரிசியை
62 ரூபாய்க்கும் 74 ரூபாயாகக் காணப்படும்
நாட்டரிசி ஒரு
கிலோகிராமை 70 ரூபாய் வரையிலும் குறைத்துள்ளதாக, அமைச்சு
அறிவித்துள்ளது.
அத்துடன்,
ஒரு கிலோகிராம்
பொன்னிச் சம்பாவின்
விலை, 78 ரூபாயிலிருந்து
71 ரூபாய் வரை
குறைக்கப்பட்டுள்ள அதேவேளை,
ஒரு கிலோகிராம்
சீனியின் விலை,
107 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை
குறைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம்
பெரிய வெங்காயம்,
135 ரூபாய்க்கும் 425 கிராம் நிறையுடைய
டின்மீன், 149 ரூபாயிலிருந்து 127 ரூபாய் வரையியும் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு
விலை குறைக்கப்பட்ட
அத்தியாவசிய உணவுப் பொருட்களை, நாடு முழுவதிலுமுள்ள
சதொச விற்பனை
நிலையங்களிலிருந்து, எவ்வித தட்டுப்பாடுமின்றிப்
பெற்றுக்கொள்ள முடியும் என, அமைச்சு மேலும்
தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment