பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை
நிறுத்துமாறு கோரிக்கை
பிரதமர்
அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துமாறு கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற
செயலாளர் நாயகத்திடம்
இந்தக் கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய
தேசியக்கட்சியின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இது தொடர்பிலான
எழுத்து மூல
பிரேரணை ஒன்றை
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
பிரதமர்
மஹிந்த ராஜபக்ஸவிற்கான
நிதி ஒதுக்கீடு
மற்றும் செலவுகளை
சவாலுக்கு உட்படுத்தும்
வகையில் இந்த
பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த
பிரேரணை எதிர்வரும்
வாரத்தில் விவாதத்திற்கு
எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்றத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய
தேசியக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நவீன்
திஸாநாயக்க, ஹெக்டர் அப்புஹாமி, காவிந்த ஜயவர்தன,
சதுர சேனாரட்ன
உள்ளிட்ட ஐக்கிய
தேசியக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.
பிரதமரின்
செயலாளர் எஸ்.அமரசேகரவிற்கான நிதி
ஒதுக்கீட்டை இடைநிறுத்துமாறு கோரியே இவ்வாறு பிரேரணை
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப்
பிரேரணையானது தற்போதைய சிக்கல் நிலைமைகளை மேலும்
அதிகரிக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment