தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
பிரயோக விஞ்ஞான
பீடத்தின் உயிரியல் பிரிவின்
புதிய துறைத்தலைவியாக
சுஜா றாஜினி நியமனம்!
தென்கிழக்குப்
பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல்
பிரிவின் துறைத்
தலைவியாக சுஜா
றாஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்குப்
பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கடந்த
1997ஆம் ஆண்டு
ஆய்வுகூட பயிற்றுனராக
இணைந்துக் கொண்ட
இவர், 1999ஆம்
ஆண்டு முதல்
விரிவுரையாளராக பதவியேற்று இன்று வரை செயற்பட்டு
வருகிறார்.
பெரிய
கல்லாற்றை பிறப்பிடமாகக்
கொண்ட சுஜா
றாஜினி வரதராசன்,
தனது ஆரம்பக்
கல்வியை மட்டக்களப்பு,
விநாயகர் வித்தியாலயத்தில்
ஆரம்பித்து, இடைநிலைக் கல்வியை பெரிய கல்லாறு
மத்திய கல்லூரியிலும்,
உயர் கல்வியை
கல்முனை, கார்மேல்
பாத்திமா கல்லுரியிலும்,
பட்டப்படிப்பை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்
தொடர்ந்திருந்தார்.
கிழக்குப்
பல்கலைக்கழகத்தில் விஷேட தரம்
வரை கல்விகற்ற
இவர், தனது
கலாநிதிப் பட்டத்தையும்
அதே பல்கலைக்கழகத்திலேயே
பூர்த்தி செய்திருந்தார்.

0 comments:
Post a Comment