இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின்
விலை அதிகரிப்பு



இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 4 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது .

இருப்பினும், ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top