Saturday, May 31, 2014

மது மற்றும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்


மது மற்றும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மது மற்றும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பில் நேற்று 31 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.   

 சர்வதேச புகைத்தல் ,மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஊர்வலம் காலை 9 மணிக்கு மட்டக்களப்பு பன்சலை சந்தியில் ஆரம்பமாகி காந்தி சதுக்கத்தை சென்றடைந்தது.     இந்த ஊர்வலத்தில் புளியந்தீவு வலய சமுர்த்தி சங்கங்களின் அங்கத்தவர்கள் ,மாணவாகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் என அறிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment