Monday, June 30, 2014

ஈராக்கில் இஸ்லாமிய தனி நாடு: போராளிகள் அறிவிப்பு தங்களது அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி ( புதிய கலிஃபா ) எனவும் தெரிவிப்பு


ஈராக்கில் இஸ்லாமிய தனி நாடு:
போராளிகள் அறிவிப்பு

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ முதல் ஈராக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள டியாலா மாகாணம் வரையுள்ள பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாக இ.எஸ்.இ.எல். போராளிகள் அறிவித்துள்ளனர்., தங்களது அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை புதிய கலிஃபா (இஸ்லாமிய மதத்தை வழிநடத்தும் நபிகளின் வாரிசு அதாவது மதத் தலைவர்) என்று அறிவித்துள்ளதுடன், இனிமேல் அவர் கலிஃபா இப்ராஹிம் என்று அழைக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை கிலாஃபத் கோட்பாட்டைப் பின்பற்றும் தனி இஸ்லாமிய நாடாக சன்னி பிரிவைச் சேர்ந்த .எஸ்..எல்.போராளிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.
இந்த நிலையில், போராளிகளின் பிடியில் உள்ள நகரங்களை மீட்க ஈராக் இராணுவம் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது குறித்து பாக்தாதில் செய்தியாளர்களிடம் அந்நாட்டு இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் காசிம் அட்டா கூறுகையில், ""திக்ரித் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படை முன்னேறி வருகிறது. அங்கு இராணுவத்துக்கும், போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது.
இராணுவ வீரர்கள் அந்த நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும், போராளிகள்  இரு வாரங்களுக்கு முன் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டன.
அமெரிக்க இராணுவ ஆலோசகர்களின் ஒத்துழைப்புடன், போராளிகளின் இலக்குகளை குறிவைத்து ஈராக் இராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது'' என்றார்.
இந்நிலையில், ஈராக் இராணுவத்தின் வான் வழித் தாக்குதலுக்கு உதவும் வகையில், தனது போர் விமானங்களை ரஷியா தொடர்ந்து வழங்கி வருகிறது.
சதாம்  ஹுஸைன் மாளிகை தகர்ப்பு?
இதனிடையே, திக்ரித்தில் உள்ள முன்னாள் அதிபர் சதாம் ஹுஸைன் மாளிகை வளாகத்திற்குள் இராணுவ விமானங்கள் குண்டுகளை வீசியதில் பெரும் புகைமண்டலமாக காட்சியளித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையிலும், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து தனி இஸ்லாமிய நாடாக .எஸ்..எல். போராளிகள் அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ முதல் ஈராக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள டியாலா மாகாணம் வரையுள்ள பகுதிகளை இவ்வாறு தனி இஸ்லாமிய நாடாக .எஸ்..எல். போராளிகள் அறிவித்துள்ளனர். மேலும், தங்களது அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை புதிய கலிஃபா (இஸ்லாமிய மதத்தை வழிநடத்தும் நபிகளின் வாரிசு அதாவது மதத் தலைவர்) என்று அறிவித்துள்ளதுடன், இனிமேல் அவர் கலிஃபா இப்ராஹிம் என்று அழைக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.


எமக்குள் முரண்பாடுகள் வருகின்றபோது நாட்டாமை செய்தது இராணுவத்தினரும் பொலிசாருமே!


எமக்குள் முரண்பாடுகள் வருகின்றபோது
நாட்டாமை செய்தது இராணுவத்தினரும் பொலிசாருமே!

-    ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்

இறைநம்பிக்கையெல்லாம் வெறும்பேச்சாக மாறிக் கொண்டு வருகின்றது. எமக்குள் ஆயிரத்தெட்டுப் பிரிவுகளை கோடுகளாகக் கீறிக்கொண்டு கோடு தாண்டி விளையாடுகிறார்கள்.
ஒருபுறம் அந்நிய மதத்தவர்கள் பள்ளிகளை உடைத்தெறியவும் முஸ்லிம்களின் பொருளாதாரம் தொடக்கம் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்து சலுகைகளையும் இல்லாதொழிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக ஒரு வரைபினை கையில் வைத்துக்கொண்டு கழத்தில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் இவர்களின் கூத்துவேறு.
இன்று சாய்ந்தமருதில் இரு குழுக்கல் மோதல் அதாவது SLTJ, ITJ இலங்கை தெளஹீத் ஜமாத், இந்திய தெளஹீத் ஜமாத் என இன்று மோதல் இடம்பெற்று விஷேட அதிரடிப்படை வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரியவருகிறது.
பள்ளிகளில் தராவிஹ் தொழுகைக்கு இரண்டு சப்கள் கூட நிரம்பாமல் காணப்படுகின்றது. ஆகக்கூடிய தொகையாக ஐம்பது இருக்கும் அதுக்குள்ளும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இபாதத் செய்கின்றார்கள். இது ஒரளவுக்குப் பரவாயில்லை. சண்டைகள் இல்லாமல் இபாதத் செய்கிறார்கள்.
எத்தனை பள்ளிவாசல்கள் கட்டுகின்றோம் என்பது எமக்கு தேவையில்லை. ஒரு பள்ளியில் எத்தனைபேர் தொழுகிறோம் என்பதுதான் தேவை. யார் எவ்வாறு தொழுதாலும் அதற்கான கூலியை அல்லாஹ்தான் வழங்குவான்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை உடைப்பதற்கு முன்மாதிரியாக இருந்தது முஸ்லிம்களே. முஸ்லிம்களுக்குள் முரண்பாடுகள் வருகின்றபோது நடுவில் நாட்டாமை செய்தது இந்நாட்டு இராணுவத்தினரும் பொலிசாரும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இது இன்று இரவு சாய்ந்தமருதிலும் இடம்பெற்றுவிட்டது.
எமக்குள் அழுக்கை வைத்துக் கொண்டு பிறர்மீது குற்றம் சாட்டுவது சிறப்பாக இல்லை. முதலில் நாங்கள் முன்மாதிரியாக வாழுவோம்.
        அல்லாஹ் எமக்குரிய மரியாதையை நிச்சயம் வழங்குவான்.
பிரிவினைகள் வேண்டாம்ஒன்றுபடுவோம் உயர்வு பெறுவோம்!








எமது நோன்பு கால வணக்கங்களை பிற மதத்தவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.


எமது நோன்புகால வணக்கங்களை பிறமதத்தவர்களுக்கு

தொந்தரவை ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ளவேண்டும்.

(மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்)


நோன்பு காலம் வந்து விட்டாலே முஸ்லிம் பிரிவினைவாதிகளுக்கிடையில் பிறை பார்ப்பதிலிருந்து தராவீஹ தொழுகை, பெருநாள் கொண்டாட்டம் வரை பிரச்சினைகள் வந்து கொண்டேதான் இருக்கும். அவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்துவது போல் பிற மத சகோதரர்களுக்கும் இடையில் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைய கால சூழ்நிலையில் நாம் செய்யும் எந்தக் காரியங்களும் பிற மதத்தவர்களை எந்த வகையிலும் அசௌகரியங்களுக்கு உட்படுத்தா வண்ணம் செய்து கொள்ள வேண்டும் அது வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் சரியே.
நோன்பு காலங்களில் தராவீஹ் தொழுகை 8 ரக்கஅத் என்போர் 8 ரக்கஅத் தொழுது கொள்ளுங்கள் 21 என்போர் 21 ரக்கஅத் தொழுது கொள்ளுங்கள் தயவு செய்து உங்களுக்குல் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் ஏற்படுத்திக் கொண்டு பிற மதத்தவர்களுக்கும் சஞ்சலத்தை உண்டு பண்ணி அவர்கள் காரித் துப்பும் படி செய்து விட வேண்டாம்.
மேலும் நோன்பு காலம் வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்தும் காலம் என்பதால் இஷா தொழுகையில் இருந்து தராவீஹ் தொழுகையில் ஆரம்பித்து சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் வரை வணக்கவழிபாடுகளில் ஓதல், தொழுகை, மார்க்க சொற்பொழிவு, (துஆ) பிரார்த்தனை என்று ஒலி பெருக்கிகள் துணையோடு நாம் ஈடுபடுவோம், இது பிற மதத்தவர்களும் ஒன்றாக வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு தொந்தரவாக அமையும் அந்த சூழ்நிலையில் ஒலி பெருக்கியின் தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
தராவீஹ் தொழுகை முடிந்தவுடம் ஆண்கள் சந்திகளில் கூடிக் கூடி கதைத்துக் கொண்டு அவ்விடத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நோன்புகால மார்க்க சொற்பொழிவுகளை நடாத்தும் போது உங்கள் பேச்சுக்கள் ஆக்ரோசமானதாகவும், ஆவேசமானதாகவும், உரத்த தொனியிலும் அல்லாமல் அமைதியான, சாந்தமான முறையில் பிற மதத்தையும், மதத்தினரையும் நிந்தனை செய்யாது பார்த்துக் கொள்ளுங்கள்.
பெண்கள் பள்ளிவாசல்களுக்கு சென்றுதான் தராவீஹ் தொழ வேண்டும் என்ற ஒரு கட்டாயத் தேவைப்பாடு ஒன்றும் இல்லை முடிந்தவர்கள் தொழுது கொள்ளுங்ள் முடியாதவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள். தராவீஹ் தொழச் செல்கின்றோம் என்ற பெயரில் வீதிகளில் உலாவித் திரிய வேண்டாம்.
சிங்கள, தமிழ் சகோதரர்கள் வாழும் பிரதேசங்களில் அண்மை அண்மையில் அதிகளவான பள்ளிவாசல்கள் இருந்தால் அதில் எல்லாப் பள்ளிவாசல்களிலும் ஒலி பெருக்கி மூலம் அதான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் கிடையாது மாறாக ஒரு பள்ளிவாசலில் அல்லது இரு பள்ளிவாசலில் சொன்னால் போதும். அதுவல்லாது எல்லாப் பள்ளிவாசல்களிலும் அதான் ஒலி பெருக்கி மூலம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது பிறமதத்தவர்களுக்கு தொந்தரவாக அமையும்.
ஆகவே சகோதரர்களே..!!! இந்த ரமழான் காலத்தில் ஒழுக்க நெறிகளைப் பேணி எமது வணக்க வழிபாடுகளால் பிற மதத்தினருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது இருப்போம் இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாம் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்ட மார்க்கம் என்பதை மறந்து விட வேண்டாம்.


முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா..??


முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவா..??


(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)



முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 4 எம்.பிக் கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு சேர உள்ளதாகவும்,அவர்களுக்கு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாகவும் சிங்கள மொழி பத்திரிகை ஒன்றை ஆதாரம் காட்டி ஒரு வார காலத்திற்கும் மேலாக பல இணையங்கள் செய்தியை வெளியிட்டு வருகின்றன.
சில காலங்கள் முன்பு முஸ்லிம்.கான்ஹ்கிரஸானது அரசை விட்டு வெளியேறப் போகிறோம் என அரசை ஏதாவது ஒரு விடயத்தில் எச்சரித்தால்,.
"நீங்கள் விரும்பினால் வெளியேறலாம் ,நீங்கள் வெளியேறினால் உங்களுடன் எத்தனை பேர் வருவார்கள்..? "என அரச தரப்பு கேள்வி எழுப்பும்.
அந்த சர்ந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலகி இருந்தால் மிகப் பெரிய விளைவுகளை முஸ்லிம் காங்கிரஸ் அனுபவித்திருக்கலாம் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்க மேலுமொரு முக்கிய விடயமாகும்.
சில காலங்கள் முன்பு இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெளியாகிய தகவலை மீண்டும் பட்டை தீட்டி வெளியிட்ட ஒரு தகவலாகவே இத் தகவலைப் பார்க்க வேண்டி உள்ளது.
ஏனெனில்,இலங்கையின் தற்கால நிலைமைகளின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம் மக்கள் அரச தரப்பினரிடமிருந்து மிகைத்த அதிருப்தியில் உள்ளார்கள் என்பது வெளிப்படை உண்மை.

முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் முஸ்லிம்களுக்காக போராடிய போதும் இன்று முஸ்லிம் மக்களிடம் சற்று செல்வாக்கை மு.கா இழக்க மு.கா மறைமுக அரச பங்காளிக் கட்சியாக இருப்பது மிக முக்கிய காரணம் என்பது மறுத்துரைக்க முடியாத ஓர் வெளிப்படை உண்மை.
அரசாங்கம் எதிர்வரும் தேர்தலில் மிகப் பாரிய பின்னடைவை சந்திக்கும் என அரசியல் அவதானிகள் கூறி வரும் இச் சந்தர்ப்பத்தில் இன்னும் மிகக் சொற்ப காலமே பாராளுமன்ற தேர்தலுக்கு இருக்கின்ற போது தனது தொடர்ச்சியான அரசியற் பயணம் பாதையில் அக்கரைக் கொண்ட எந்த அரசியல் வாதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியோடு இணைவது உசிதமானது அல்ல.
இச் சந்தர்ப்பத்தில் மு.கா இலிருந்து யாராவது ஸ்ரீ.சு. யோடு இணைவார்களாக இருந்தால் முஸ்லிம் மக்களிடமிருந்து செல்லாக்காசாய் தூக்கி வீசப்படுவார்கள்.
எனவே,இவர்கள் பிரதியமைச்சர் பதவியைப் பெற முதலில் பாராளுமன்றம் தெரிவாகுவார்களா..?
மாறும் 4 வருக்கும் பிரதியமைச்சர் பதவி வழங்கப்படும் போது முஸ்லிம்களிற்குள் அதிக அமைச்சும், பிரதி அமைச்சும் புழங்க வாய்ப்புள்ளதால் மாற போவதாக கூறப்படும் நால்வருக்கும் பிரதியமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது சாத்தியமற்ற ஒன்று.
கட்சித் தாவலுக்கு தயாராகிறவர்கள் மக்களிடம் எடுபட வேண்டுமாக இருந்தால் நியாயமான,ஏற்கத்தக்க காரணத்தை முன் வைக்க வேண்டும்.
தற்கால சூழ்நிலையின் அடிப்படையில் இன வாத செயற்பாடுகளை தீர்க்கவே கட்சித் தாவலுக்கான முடிவுகளை எடுத்தோம் எனக் கூறுவதே பொருத்தம்.ஏனைய காரணங்கள் தற்காலத்தில் முஸ்லிம் மக்களிடம் எடுபட வாய்ப்பில்லை.
மு.கா ஐ விட்டு ஸ்ரீ.சு. சேர அவாக் கொள்வோர் மு.கா இலிருந்து எதிர்கட்சிக்கு மாறுவார்களாக இருந்தால் அது அவர்களுக்கு நியாயமான காரணங்களை மக்களிடம் முன் வைக்க ஏதுவாக அமையுமே தவிர ஒரு போதும் அரசாங்கத்தோடு இணைந்து நியாயமான காரணத்தை தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் முன் வைக்க முடியாது.

மேலும்,மாறியவர்களுக்கு பிரதியமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டால் இவர்கள் பதவிக்காகவே மாறியவர்கள் என்ற முத்திரை தெளிவாக குற்றப்பட்டு மக்களிடமிருந்து தூக்கி வீசப்படுவார்கள்.
இத் தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து மு.கா இன் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் அவர் மீதே யாவரினதும் சந்தேகப் பார்வை திரும்பியது.ஆனால் அவரோ"அரசை விட்டு வெளியேறினால் நாங்கள் 8 பேருமே வெளியேறுவோம்"எனக் கூறி "நான் அக் கட்சி மாறுபவனில் இல்லை"என்பதை கதை புனைந்தோருக்கு தெளிவாக்கி உள்ளார்.
அரசாங்கம் வாசிக்கும் மகுடிக்கு மு.கா படமெடுத்து ஆடாமல் மகுடி வாசிக்கும் அரசாங்கத்தை எச்சரிக்கையும் வகையில் தனது செயற்பாட்டை அண்மைக்காலமாக அமைத்து வருவதாலும் அளுத்கமை போன்ற முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளின் போது அரசாங்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுவருவதாலும் மு.கா பலவீனப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட அதீத வாய்ப்புள்ளது.
ஆனால்,அரசின் மகுடிக்கு படமெடுத்தாட மு.கா உறுப்பினர்கள் சிலர் விரும்பினாலும் அதற்கு இது சரியான தருணம் அல்ல என்பதை அரசியல் வாதிகளும் நன்கே அறிவர்.
எது எவ்வாறு இருந்தாலும் தற்கால சூழ்நிலமையில் எவரும் மு.கா  விட்டு செல்ல வாய்ப்பில்லை என்பதே உண்மை.


கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை நடாத்த நடவடிக்கை!



கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும்

மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை நடாத்த நடவடிக்கை!

அளுத்கம பேருவளை போன்ற பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை காரணமாக கொல்லப்பட்ட இரு முஸ்லிம் வாலிபர்களின் மரண விசாரனை அறிக்கைகளின் மீது சந்தேகம் நிலவுவதால் குறித்தஇரு முஸ்லிம் வாலிபர்களின் உடல்களையும் மீண்டும் தோண்டி எடுத்து மரணத்துக்கான காரணத்தை கண்டறிய மரண விசாரணை மீண்டும் நடாத்தப் படவேண்டும் என கோரி இலங்கை சட்டத் தரணிகள் சங்கம் The Bar Association of Sri Lanka (BASL) நீதி மன்றத்தை கோரவுள்ளது .
வல்பிட்டிய மஸ்ஜித் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மஸ்ஜித் மீதான தாக்குதலில் இருந்து மஸ்ஜித்தை பாதுகாக்கும் நோக்குடன் போராடியவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயம் அடைந்த அதேவேளை இ ந்தஇளைஞர்கள் இருவரும் ஷஹீதாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என மரண விசாரணை அறிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக பிரதேச மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது . வன்முறை தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் ஏனைய அரச அதிகாரிகளும் துணை நின்றதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப் பட்டுவருகின்ற நிலையில் இலங்கை சட்டத் தரணிகள் சங்கம் இந்த கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார் .இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கூட்டத்தில் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறும் பொதுபல சேனா இயக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டு;க்கள் குறித்து அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாப்போர் உரிய நடவடிக்கை எடுக்காமை கண்டிக்கப்பட வேண்டியது சட்டத் தரணிகள் சங்கம் பொதுபல சேனா இயக்கம் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது.


சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் குணமடைய பிரார்த்திப்போம்


சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் குணமடைய பிரார்த்திப்போம்

(ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்)

இருதய நோய் காரணமாக தற்பொழுது கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாறை மாவட்டத்தில் மூத்த ஊடகவியலாளருமான கலாபூசணம் .எல்.எம். சலீம் குணமடைய றஹ்மத் நிறைந்த றமழான் மாதத்தில் பிரார்த்திப்போம்.
கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சலீம் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு  தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றாப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இன்று தொலைபேசியினூடாக அவரை தொடர்பு கொண்டபோது தற்பொழுது ஓரளவு நலமடைந்து வருவதாகவும் இன்னும் ஐந்து தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருந்து வைத்திய ஆலோசனையின் பின்னர் நிந்தவூருக்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் மற்றும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீட் உள்ளிட்டோர் தன்னை பார்வையிட வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எமது கல்முனை மாநகர சபை அமர்வின்போது கிரமமாக அங்கு வந்து செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் சலீம் ள் சிறப்புமிக்கவராக திகழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது மூத்த ஊடகவியலாளரான கலாபூசணம் .எல்.எம்சலீம் விரைவில் குணமடைய கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சார்பிலும்அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும் இறைவனை பிரார்த்திப்போமாக.


தீவிரவாதிகள் ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகள் இஸ்லாமிய நாடாக அறிவிப்பு நாட்டின் தலைவரையும் நியமித்தனர்


போராளிகள் ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகள்
இஸ்லாமிய நாடாக அறிவிப்பு
நாட்டின் தலைவரையும் நியமித்தனர்

ஈராக், சிரியா நாடுகளில் கைப்பற்றிய பகுதிகளுக்கு போராளிகள் இஸ்லாமிய நாடு என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த நாட்டுக்கு தலைவராக அபுபக்கீர் அல்-பகாதி என்பவரையும் அறிவித்தனர்.
ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக .எஸ்..எஸ். என்ற அமைப்பின் போராளிகள் சண்டையிட்டு வருகிறார்கள். அந்நாட்டின் மொசூல், திக்ரித், கர்பாலா உள்பட பல்வேறு நகரங்களை கைப்பற்றிய அவர்கள் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வந்தனர்.
இந்த நிலையில் ஈராக் பாராளுமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. எனவே போராளிகள் பாக்தாத்தை நெருங்குவதற்குள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும்படியும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்கும்படியும் பிரதமர் நூர் அல்-மாலிகி iராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது
தூக்கிலிடப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் ஹுஸைனின் பிறந்த ஊரான திக்ரித் நகரை மீண்டும் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றும் முயற்சியாக அந்த நகருக்கு போர்க்கப்பல்கள் மூலம் இராணுவம் கூடுதல் படைகளை அனுப்பியது. இந்த நிலையில், திக்ரித் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முகாமிட்டு இருந்த தீவிரவாதிகளை முற்றுகையிட்டு இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், தீவிரவாதிகள் 70 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் திக்ரித் பல்கலைக்கழகத்தை இராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் உச்சியில் ஈராக்கின் தேசிய கொடியையும் ஏற்றினர்.இது தவிர வடக்கு பகுதியில் உள்ள ஜர்ப் அல்-சாகர் நகரில் இராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 72 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, .எஸ்..எஸ். சன்னி போராள்கள் தாங்கள் ஏற்கனவே சிரியா நாட்டில் கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம் கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இஸ்லாமிய நாடு என்ற ஒரு நாட்டை உருவாக்கி உள்ளனர். இதன் தலைவராக அபு பக்கீர் அல்பகாதி என்பவரையும் நியமித்து உள்ளனர். அவரது புகைப்படங்களையும் சமூக வளைத்தளங்களில் இன்று வெளியிட்டுள்ளனர்.