Friday, August 1, 2014

உலக அளவில் அரை மணி நேரம் முடங்கியது ஃபேஸ்புக்


உலக அளவில் அரை மணி நேரம் முடங்கியது ஃபேஸ்புக்

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் தழுவிய அளவில் சுமார் அரை மணி நேரத்துக்கு முடங்கியது.
இலங்கை நேரப்படி இரவு 9.30 மணி  தொடக்கம் 10 மணி வரை ஏற்பட்ட ஃபேஸ்புக் சேவை பாதிப்பின் எதிரொலியாக, மற்றொரு சமூக வலைத்தளமான ட்விட்டரை நோக்கி இணையவாசிகள் படையெடுத்தனர்.
ஃபேஸ்புக் தளத்தில் சர்வரில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், 'மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்' என்ற தகவலை மட்டும் ஃபேஸ்புக் வெளியிட்டது.
உலக அளவில் இணையதளம் மட்டுமின்றி, ஆப்-களிலும், மொபைலிலும் இந்த முடக்க பாதிப்பு ஏற்பட்டது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 19 ஆம் திகதியும் இதேபோல் ஃபேஸ்புக் அரை மணி நேரம் முடங்கியது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment