Friday, August 1, 2014

ஒரே நாடு ஒரே மக்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நல்லிணக்க அறிவுறுத்தல் சம்மந்தமான தேசிய மாநாடு



ஒரே நாடு ஒரே மக்கள்
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நல்லிணக்க அறிவுறுத்தல் சம்மந்தமான தேசிய மாநாடு

நல்லிணக்க அறிவுறுத்தல்கள் சம்மந்தமான தேசிய மாநாடு எதிர்வரும் 2014.08.05 ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சப்ரமுவ பல்கலைக்கழக வேந்தர் வண கலாநிதி கும்புறுகமுவே வஜிர நாயக்க தேரர் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம்.எச் முஹம்மத் ஆகியோரின் இணைத் தலைமையில் செயற்படும் ஒரே நாடு ஒரே மக்கள் அமைப்பினால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சிறப்புரை நிகழ்த்துவார். ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் இன நல்லிணக்கம் தொடர்பாக விசேட உரை நிகழ்த்துவார்.


No comments:

Post a Comment