Monday, September 29, 2014

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு



பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து

ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உட்பட 4 பேரின் தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கக் கோரியும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜெயலலிதா உட்பட 4 பேரின் சார்பாக ஜாமீன் மனுக்கள், தீர்ப்பின் நகலுடன் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிமன்ற அமர்வு முன்பு திங்கட்கிழமை காலை தாக்கல் செய்யப்பட்டன.
ராம்ஜெத் மலானி ஆஜராகிறார்:
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் ஆஜராகிறார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானிஇதற்காக லண்டனில் இருந்து அவர் தாயகம் திரும்புகிறார்திங்கள்கிழமை அவர் இந்தியா வந்தடைகிறார்.
ஜெயலலிதாவை சந்திக்கிறார் ராம்ஜெத் மலானி:           
ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில்லண்டனில் இருந்து திரும்பும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானிஜெயலலிதாவை அவர் அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு:
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார்.
அவர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் சசிகலாசுதாகரன்,இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 10 கோடி அபராதமும் விதித்தார்இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Sunday, September 28, 2014

தமிழ்நாடு முதல் அமைச்சர்கள் விபரம்


தமிழ்நாடு   முதல் அமைச்சர்கள் விபரம்

1952ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்அமைச்சர் பதவி வகித்தவர்கள் விபரம் வருமாறு:

ராஜாஜி        10-04-1952 முதல் 13-04-1954 வரை

கே.காமராஜ்        13-04-1954 முதல் 02-10-1963 வரை

எம்.பக்தவச்சலம்        02-10-1963 முதல் 06-03-1967 வரை

அண்ணா        06-03-1967 முதல் 03-02-1969 வரை

மு.கருணாநிதி         10-02-1969 முதல் 04-01-1971 வரை
                              15-03-1971 முதல் 31-01-1976 வரை

எம்.ஜி.ஆர்        30-06-1977 முதல் 17-02-1980 வரை
                              09-06-1980 முதல் 15-11-1984 வரை
                              10-02-1985 முதல் 24-12-1987 வரை

ஜானகி ராமச்சந்திரன்        07-01-1988 முதல் 30-11-988 வரை

மு.கருணாநிதி        27-01-1989 முதல் 30-01-1991 வரை

ஜெ.ஜெயலலிதா        24-06-1991 முதல் 12-05-1996 வரை

மு.கருணாநிதி        13-05-1996 முதல் 13-05-2001 வரை

ஜெ.ஜெயலலிதா        14-05-2001 முதல் 21-09-2001 வரை

.பன்னீர்செல்வம்        21-09-2001 முதல் 01-03-2002 வரை

ஜெ.ஜெயலலிதா        02-03-2002 முதல் 12-05-2006 வரை

மு.கருணாநிதி        13-05-2006 முதல் 15-05-2011 வரை


ஜெ.ஜெயலலிதா        16-05-2011 முதல் 27-09-2014 வரை

ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு: நாளை பதவியேற்பு விழா இருக்கும் என தகவல்.


ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு:

நாளை பதவியேற்பு விழா இருக்கும் என தகவல்.


தமிழ்நாடு அ.தி.மு.. தலைமை கழகத்தில் இன்று மாலை எம்.எல்..க்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் .பன்னீர் செல்வம், சட்டமன்ற கட்சி தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து .பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 4 பேர் குழு தமிழக கவர்னர் கே.ரோசய்யாவை சந்திப்பதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.

 மாலை 6.40 மணியளவில் அவர்கள் கவர்னர் ரோசய்யாவை சந்தித்து பேசினர். அப்போது, .பன்னீர் செல்வம், தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததற்கான, எம்.எல்..க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கவர்னர் ரோசய்யாவிடம் வழங்கினார். இதைதொடர்ந்து . பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்நாளை பிற்பகலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி  இருக்கும் இருக்கும் கூறப்படுகிறது.

தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர்செல்வம்: நாளை பதவியேற்பு


தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர்செல்வம்:

நாளை பதவியேற்பு




சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்த முதல்வரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்க நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக  .பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் நாளை ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ள விழாவில் முதல்வராக பதவியேற்க உள்ளார். அப்போது முக்கிய அமைச்சர்களும் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, September 27, 2014

புதிய அரசியல் சூழ்நிலையால் அதிகாரிகள் குழப்பம்: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? எஸ்.சசிதரன்


புதிய அரசியல் சூழ்நிலையால் அதிகாரிகள் குழப்பம்:
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

எஸ்.சசிதரன்

தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் ஜெயலலிதா இழந் துள்ளார். இதனால் தமிழகத்தின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப் பது என்பது குறித்து அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி முடி வெடுக்கவேண்டும். அந்த முடிவை தமிழக ஆளுநரிடம் அவர்கள் அளிக்கவேண்டும். இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டபோது, “இதுபற்றி நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அனைவரும் அதிர்ச்சியில் உள்ளோம். எனினும் இது தொடர்பாக பொதுச்செயலாளர் விரைவில் கடிதம் அனுப்புவார். அதன்படியே அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்என்றனர்.
இதற்கிடையே, அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் மூன்று அமைச்சர்களின் பெயர்கள் பலமாக அடிபடுகிறது. தற்போதைய அமைச்சரவையில் ஜெயலலி தாவுக்கு அடுத்த மூத்த அமைச்சராக உள்ள .பன்னீர்செல்வம் முதல்வராக அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பின்போது இடையிடையே வெளியே வந்த ஜெயலலிதா, .பன்னீர்செல்வத்திடம்தான் பேசிவிட்டுச் சென்றார். இது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக அவர் தொடர்ந்து திகழ்வதையே காட்டுவதாக அதிமுக-வினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையே ஒரு இளம் அமைச்சர் உட்பட இரண்டு அமைச்சர்களின் பெயர்களும், முன்னாள் அரசு பெண் அதிகாரி ஒருவரின் பெயரும் முதல்வர் பதவிக்கு விவாதிக்கப்படுவதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், .பன்னீர்செல்வத்துக்கே மீண்டும் முதல் வராகும் வாய்ப்புகள் உள்ளதாக கட்சி வட்டாரங்களும், அமைச்சரவை வட்டாரங் களும் தெரிவித்தன. இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாவும் அவர்கள் கூறினர்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிபோயுள்ள நிலையில் (வரும் 6-ம் தேதிக்குப் பிறகு அவர் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை கிடைக்காத பட்சத்தில்), ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அது பற்றிய அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம் வெளியிடும்.
இதற்கிடையே, தமிழகத்தில் எழுந்துள்ள புதிய சூழல் குறித்து சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதல்வரின் பதவி, நீதிமன்ற தீர்ப்பினால், ஆட்சிக்காலத்திலேயே பறிபோகும் நிலை உருவாகியிருக்கிறது. அதுபோன்ற நேரத்தில் என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளவேண்டும் என்பது பற்றி தெளிவான வழிகாட்டுதல் இல்லை. அதனால் நாங்கள் ஆலோசித்தே முடிவெடுப்போம்.

இதற்கு முன்பெல்லாம் முதல்வர் ராஜினாமா செய்யும்போது, தனது அமைச்சரவையையும் கலைத்துவிடும்படி கடிதம் கொடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலில் அமைச்சர்கள் ராஜினாமா செய்யத் தேவை ஏற்படாது என்றே எண்ணுகிறோம் என்றனர்.

ஜெயலலிதாவுக்கு கைதி எண்ணாக 7402 வழங்கப்பட்டது


ஜெயலலிதாவுக்கு
கைதி எண்ணாக 7402 வழங்கப்பட்டது

ஜெயலலிதாவுக்கு கைதி எண்ணாக 7402 வழங்கப்பட்டது சசிகலாவுக்கு 7403, சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு 7405 ஆகிய எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிறையில் உள்ள மருத்துவர் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பெங்களூர் சிறையில் வைத்து அங்குள்ள டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது அவர் நலமாக உள்ளார் என்றும், சிறையில் இருந்து வெளியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்க தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து, ஜெயலலிதா தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியானது



தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகள் 
இன்று வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.   இந்தப் பெறுபேறுகளை    www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ  இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் - ஹில்லாரி தம்பதியரின் மகள் செல்சியாவுக்கு பெண் குழந்தை



அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் - ஹில்லாரி தம்பதியரின் மகள்
செல்சியாவுக்கு பெண் குழந்தை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், ஹில்லாரி தம்பதியரின் ஒரே மகள் செல்சியா (வயது 34). இவர் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி மூலதன வங்கியாளர் மார்க் மெஜ்வின்ஸ்கியை மணந்தார். இந்த நிலையில் செல்சியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.
அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாகபேஸ் புக்”, ”டுவிட்டர்சமூக வலைத்தளங்களில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,  ”எங்களுக்கு சார்லட் கிளிண்டன் மெஜ்வின்ஸ்கி என்ற மகள் பிறந்திருப்பதை நாங்கள் கொண்டாடுகிறோம். மார்க்கும், நானும் அன்புடனும், நன்றியுடனும், பிரமிப்புடனும் இருக்கிறோம்என கூறி உள்ளார். பேத்தி பிறந்திருப்பதை கிளிண்டன், ஹல்லாரி தம்பதியர் கொண்டாடுகின்றனர்.

ஜனாதிபதிக்கு விளக்கமளித்தது சர்வதேசப் புரிந்துணர்விற்கான வணிகச் சபை


ஜனாதிபதிக்கு விளக்கமளித்தது

சர்வதேசப் புரிந்துணர்விற்கான வணிகச் சபை

சர்வதேசப் புரிந்துணர்விற்கான வணிகச் சபை (Business Council for International Understanding - BCIU) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கான விளக்கமளிக்கும் நிகழ்வொன்றை நியூயோர்க் நகரில் நடாத்தியது.
இந்த நிகழ்வு இரண்டு பிரதான நோக்கங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் ஏற்கனவே முதலிட்டுள்ள அல்லது நாட்டிலுள்ள முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்கான ஆர்வத்தைக் கொண்டுள்ள பெரிய ஐக்கிய அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஒன்றுசேர்ப்பது முதலாவதாகும். தங்கள் நிறுவனங்களின் ஆர்வங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்கானதும், வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, இலங்கையின் வணிக நடவடிக்கைகளின் ஈடுபடுவது தொடர்பாக பல்வகையான விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடனும், ஏனைய உயர்நிலை இலங்கை அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை நடாத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டாவதாக, இலங்கையில் காணப்படும் வாய்ப்புக்கள், ஆதாயங்கள் தொடர்பாக இச்சந்திப்பில் தனியார் துறை குழுக்களிடம் இலங்கை அதிகாரிகள் விளக்கமளிக்க வாய்ப்புக் கிடைத்தது.
இலங்கைவரும் நிறுவனங்களுக்கு நாட்டிலுள்ள "சமாதானமும், நிலையான தன்மையும்" சிறந்த ஆதாயமாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக், உயர் திறனுடைய ஊழியர்படையையும் இலங்கை வழங்கக்கூடியதாக உள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு, சுற்றுலாத்துறை ஆகியன புதிய முதலீட்டாளர்களுக்கு மிக அதிக வாய்ப்புக்களை வழங்கக்கூடியனவாக உள்ளனவாக சிறப்பித்துக் கூறப்பட்ட துறைகளில் சிலவாகும்.
போயிங் (Boeing), சிற்றிகுறூப் (Citigroup), எக்ஸொன் மோபில் (Exxon Mobil) போன்றன உட்பட ஐக்கிய அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதோடு, அவர்களின் பலர் இலங்கைச் சந்தையில் நுழைவதற்கான விருப்பை வெளிப்படுத்தினர்.
1955ம் ஆண்டு .அமெரிக்க ஜனாதிபதி ட்வைச் டி ஐசென்ஹவர் (Dwight D. Eisenhower) இன் கீழ் வெள்ளை மாளிகையின் முன்னெடுப்பாக ஆரம்பிக்கப்பட்ட சர்வதேசப் புரிந்துணர்விற்கான வணிகச் சபையானது ஒரு  சர்வதேச வணிக அமைப்பாகும். உலகின் முன்னணி வணிக மற்றும் அரசியல் தலைவர்களுக்கான பேச்சுவார்த்தை, கூட்டு ஆகியவற்றிற்கான சார்பற்ற வழிகாட்டியாக வர்த்தகத்தையும், இராஜதந்திரத்தையும் இந்த அமைப்பு ஊக்குவிக்கிறது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாப். .எச்.எம். அஸ்வர், திரு. ஜே.ஆர்.பி. சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி. பாலித கோஹன, ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் திரு. பிரசாத் காரியவசம், பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர். ஜெனரல். ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா!



பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா!

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் பொலிஸார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.

இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 100 கோடி ரூபா அபராதம்! 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது


முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 

4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

100 கோடி ரூபா அபராதம்!

10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மற்றைய குற்றவாளிகளான ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த அபராதம்  குறித்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா இந்த தீர்ப்பை வாசித்தார்.
10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!
நான்காண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன் படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார்.
இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம்.
எனவே ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஒரு சட்டசபை அல்லது மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எனவே 6 ஆண்டு போட்டியிட முடியாது என்றால் இரு பொதுத் தேர்தல்களில் குற்றவாளியால் போட்டியிட முடியாது என்றே அர்த்தம்.
எனவே ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தவிர்த்து இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தாலும் கூட இன்னும் 2 சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது.