Friday, September 26, 2014

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு


தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா
சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு



தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல உள்ளார்சென்னையில் இருந்து பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் ஜெயலலிதாவுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
பரப்பன அக்ரஹாராவில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதுநள்ளிரவு முதல் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதற்கான உத்தரவை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment