Thursday, October 9, 2014

பொருளாதாரப் புரட்சிக் கண்காட்சி சாய்ந்தமருதில் இன்று அங்குரார்ப்பணம்!


பொருளாதாரப் புரட்சிக் கண்காட்சி

சாய்ந்தமருதில் இன்று அங்குரார்ப்பணம்!

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, உற்பத்தி, அபிவிருத்தி, கிராமிய, கைத்தொழில், அபிவிருத்தி, மின்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சு சாய்ந்தமருது மல்ஹர் சம்ஸ் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்துள்ள கிழக்கின் பொருளாதாரப் புரட்சிக் கண்காட்சி இன்று வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, உற்பத்தி, அபிவிருத்தி, கிராமிய, கைத்தொழில், அபிவிருத்தி, மின்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இக்கண்காட்சி அங்குரார்ப்பண வைபவத்தில் கல்முனை மாநகர முதல்வர்- எம்.நிஸாம் காரியப்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் .எல்.எம்.நசீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி இன்று தொடக்கம் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.




No comments:

Post a Comment