Saturday, November 29, 2014

சாய்ந்தமருது பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு!


சாய்ந்தமருது பைதுஸ் ஸக்காத் நிதியத்தின்
வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு!

43 குடும்பந்தினருக்கு 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும்
 118 நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் 17 ஆவது வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு  29 ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
பைதுஸ் ஸக்காத் நிதியத் தலைவர் மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி எம்..அப்துல் காதர் (மிஸ்பாஹி) பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது-மளிகைக்காடு  பள்ளிவாசல்களின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா, செயலாளர் எம். ஐ. அப்துல் மஜீத், பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் பணிப்பாளர் எம்.எம்.இப்ராஹிம், செயலாளர் யூ.எல்.எம்.ஜவ்பர், எம்.எம்.இஸ்மாயில்  உட்பட உலமாக்கள், மரைக்காயர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு 43 குடும்பந்தினருக்கு 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் 118 நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.








No comments:

Post a Comment