Wednesday, December 31, 2014

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்
நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு



சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் காயம் அடைந்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் சீனாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்காய் நகரில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரபமான சென்யி சதுக்கத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம் மோசமான விளைவுக்கு எடுத்து சென்றுவிட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமெரிக்க டாலரை போன்ற கூப்பன்கள் மாடியில் இருந்து வீசப்பட்டுள்ளது. இதனை பார்த்த புத்தாண்டு கொண்டாடிய மக்கள் அடித்து, பிடித்து அதனை எடுக்க முந்தி சென்றனர் எனக் கூறப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், சில கூப்பன்கள் அமெரிக்க டாலர் போன்று இருந்தது, அவை அனைத்தும் பண்ட் பகுதியில் இருந்த வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து வீசப்பட்டது. அப்போது ஆற்றின் கரையோரம் நின்ற மக்கள் அதனை எடுக்க முயற்சி செய்தனர். இதனால் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். என்று தெரிவித்தார். இந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவருமே மாணவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலை தூண்டியது என்னவாக இருக்கும் என்பது உடனடியாக தெளிவாகவில்லை. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இடம்பெற்ற மகளிர் மாநாடு


கொழும்பில் இடம்பெற்ற

மகளிர் மாநாடு

MY3 ta Kantha Sawiya. Organized by Rossy Senanayeke Chairperson Lakvanitha.

நேற்று (2014.12.31) காலை கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் மகளிர் அமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பிணர் ரோசி சேனாநயக்க தலைமையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தாபாவும் இணைந்து கொண்டார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேனா, ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரியதிருமதி சானாஸ் ரவுப் ஹக்கீம், அனோமா பொண்சேகா, திருமதி கபீர் ஹாசீம், பாத்திமா ரவி கருநாயக்க, தலத்தா அத்துக்கோரள, பெரோஸா முஸம்மில், ஹிருனிக்கா  மகளிர் பாடகர்கள், நடிகர்கள். இயக்குணர் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.












இணையதளத்தில் ஜோர்டான் விமானியின் பேட்டி ஐ.எஸ். போராளிகள் வெளியிட்டனர்

இணையதளத்தில் ஜோர்டான் விமானியின் பேட்டி
ஐ.எஸ்.  போராளிகள் வெளியிட்டனர்



தங்களிடம் பிடிபட்ட ஜோர்டான் விமானியின் பேட்டியை ஐஎஸ் போராட்ட அமைப்பினர் தங்களது இணையதள பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் இணைந்து ஐஎஸ் போராளிகளுக்கு எதிராக  ஈராக், சிரியாவில் வான் வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஜோர்டானும் இணைந்துள்ளது.
அந்நாட்டு போர் விமானம் கடந்த வாரம் வடகிழக்கு சிரியாவில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதில் விமானி யூசுப் அல்- கசாஸ்ப் (26 வயது) மட்டும் இருந்துள்ளார். விமானம் பறக்கும்போது வெளியாகும் வெப்பத்தை கண்காணித்து தாக்கும் ஏவுகணை மூலம் அதனை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்துவிட்டது. போராளிகள் கூறுவதுபோன்ற நவீன ஆயுதங்கள் எதுவும் அவர்களிடம் கிடையாது என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈராக், சிரியாவில் ஐஎஸ் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் தாக்குதலில் இது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அந்த விமானியை போராளிகள் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த விமானியின் பேட்டியை ஐஎஸ் போராளிகள் தங்கள் இணையதள பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதில் விமானியின் பெயர், குடும்பம், வயது, எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதுபோன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அதற்கு விமானி பதிலளித்துள்ளார்.

இந்த பேட்டி தொடர்பாக பதிலளிக்க ஜோர்டான் அரசுத் தரப்பு மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருவில் இருக்கும்போதே அரிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்ட மூன்று பெண் குழந்தைகள்!


கருவில் இருக்கும்போதே அரிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்ட மூன்று பெண் குழந்தைகள்



தாயின் கருவறையில் உயிர்பிழைக்க போராடிக்கொண்டிருந்த மூவர்களை, கருவறையில் இருக்கும்போதே ஆபத்து நிறைந்த அரிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டனர்.
நுட்பமான அறுவை சிகிச்சை செய்து மூன்று பெண்களின் உயிர்களை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளார்கள்.
மூவர்களான எய்லாஹ், எரின் மற்றும் எல்சி, அக்டோபர் மாதம் பிறந்தனர், மூவர்களில் மிகச்சிறியவளான எல்சி, மிகவும் சிறியதாக இருப்பதால் சில மாதங்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மூவர்களில் எய்லாஹ் மற்றும் எரின் டிசம்பர் மாத்திற்கு முன்னதாகவே வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர், ஆனால் எல்சி மட்டும் மருத்துவமனையில் ஆக்சிஜனில் வைக்கப்பட்டு -கிறிஸ்மஸ் தினத்தன்று பெற்றோர்களின் மகிழ்ச்சிக்காக, வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டாள்.
மூவர்களின் தாயான 26 வயதுடைய லாரா ஸ்லிங்கர், எங்களது மூன்று பெண்களும் ஆரோக்கியமாக உள்ளனர் மற்றும் இவர்கள் எங்களுக்கு மிகச்சிறந்த கிறிஸ்மஸ் பரிசு என்றும் கூறுகிறார். மிஸ் ஸ்லிங்கர், 17 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோது மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றிருந்தார், அப்போது இரண்டு குழந்தைகளுக்கு இடையே இரத்த விநியோக பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இந்த மூவர்களில் இரண்டு பெண் குழந்தைகளான எய்லாஹ் மற்றும் எல்சி ஒரே மாதிரியான உருவம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் இருவரும் நஞ்சுக்கொடியிலிருந்து இரத்தத்தை பகிர்ந்துகொண்டிருந்தனர். அதில் இரட்டையர்களில் ஒருவருக்கு அதிகமான இரத்தத்தை பெறுக்கொண்டிருந்தார், அதனால் மற்றவருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல்போனது. இந்த நோயின் பெயர் டிவின் டூ டிவின் ட்ரான்ஸ்ப்யூஷன் சின்ட்ரோம் (TTTS) அரிய வகையான நோய் இருப்பதை கண்டறிந்து சிகிச்சை செய்யப்பட்டது.
மிகச்சிறியவளான எல்சி வளருவதில் ஆபத்து இருந்தது, அவளது எரின் சகோதரியை விட சிறியதாக இருந்தாள். அதனால் அவருக்கு இதயம் வளருவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் மூவர்களின் பெற்றோர், ஒரே மாதிரியான உருவம் கொண்ட இரட்டையர்களின் இரத்த வழங்குதலை சிகிச்சை செய்து பிரித்தால் நலமடைவர் என்ற நம்பிக்கை உள்ளது, என்றாலும் இந்த அறுவை சிகிச்சை செய்தால் மூன்று குழந்தைகளுக்கும் ஆபத்து இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
மூவர்களில் தனிமையான எரின், நஞ்சுக்கொடியிலிருந்து இரத்தத்தை பகிர்ந்துக்கொள்வதில் பாதிக்கப்படவில்லை, ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்தால் கருவில் உள்ள தொற்றினாலோ அல்லது அறுவை சிகிச்சையில் தவறு ஏற்பட்டாலோ அவளது உயிருக்கும் ஆபத்து இருந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று ஸ்லிங்கர் கூறியுள்ளார்¢.
ஒரே மாதிரியான உருவம் கொண்ட இரட்டையர்களின் இரத்த வழங்கல் பிரிக்க ஒரு லேசர் பயன்படுத்தி, தெற்கு லண்டனில் உள்ள டூட்டிங் நகரில் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையின் டாக்டரான அமர் பிதே மூலம் சிறப்பு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த மூன்று பெண்களின் பெற்றோர், புதிய இரத்த வழங்கல் சரியாக வேலை செய்கிறதா என்பதை அறிய இரண்டு வாரம் மருத்துவமனையில் காத்திருந்தனர்.
இந்த ஆபத்தான அறுவை சிகிச்சை செய்து முடித்த ஆறு மணி நேரத்திற்கு பிறகு மூவர்களை சோதனை செய்து பார்த்தபோது இதயம் நன்றாக துடித்துக்கொண்டிருந்தது. இந்த அறுவை சிகிச்சையில் மூவர்களில் ஒருவர் கூட உயிரிழக்காமல் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று கேள்விபட்டதும் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்று மூவர்களின் தந்தையான 29 வயதுடைய ஹாலிவல் கூறியுள்ளார்.

இந்த மூவர்களும் கருவுறுதல் சிகிச்சை செய்யாமல் இயற்கையாக உருவான பெண் குழந்தைகள் ஆவர். இந்த அறுவை சிகிச்சை முறை மூவர்களுக்குள் செய்யப்படும் மிக அரிய சிகிச்சை ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தினை முன்னிட்டு சென்னையில் ஜனவரி 4ஆம் திகதி மதுபானக் கடைகள் மூடல்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தினை முன்னிட்டு
சென்னையில் ஜனவரி 4ஆம் திகதி மதுபானக் கடைகள் மூடல்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தினை முன்னிட்டு, ஜனவரி 4ஆம் திகதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால் மதுபான விதி முறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இரசிய திருமணம்

முன்னாள் கிரிக்கெட் வீரர்
இம்ரான் கான் இரசிய திருமணம்


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (62 வயது) கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிபிசி வானிலை அறிவிப்பாளர் ஒருவரை இரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இவர் தற்போது பாகிஸ்தான் தெக்ரிக்-- இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.
செய்தி அறிவிப்பாளரின் பெயர் ரெஹாம் கான் (வயது 41) இவர் ஏற்கனவே விவகாரத்து பெற்றவர் இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.இவர் பிபிசியின் சவுத் டுடே வானிலை அறிவிப்பாளராக உள்ளார். பல மாதங்களுக்கு முன்பே இவர்கள் இடையிலான வதந்தி பரவியது.தற்போது இவர்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இந்த திருமணத்திற்கு இம்ரான் கான் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இம்ரான்கான் 1995-ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த ஜெமிமா கோல்டுஸ்மித் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த 2004-ம் ஆண்டு பிரிந்தனர். இத்தம்பதிக்கு சுலைமான், காசிம் என இரு குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளும் தாயுடன் இங்கிலாந்தில் வசித்து வருகின்றன.
புதிய பாகிஸ்தானை உருவாக்கிய பிறகே மறுமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக, இம்ரான் கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது..

62 வயதாகும் இம்ரான்கானுக்கு பெண்களுடன் உள்ள சகவாசம் குறித்து சமூக இணையதளங்களில் மோசமான கருத்துகள் பரவி வருகின்றன. இந்நிலையில் அவர் மறுமணம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.இது அவரது அரசியல் இம்மேஜை பாதிக்கலாம் என் அரசியல் விமரசகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.  

மைத்திரிக்கு, பைஸர் முஸ்தபா ஆதரவு

மைத்திரிக்கு, பைஸர் முஸ்தபா ஆதரவு

பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா கொழும்பு, விஹாரமகாதேவியில்  நடைபெற்ற  பொது எதிரணியின் கூட்டமொன்றில் பங்கேற்றார்.   பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.








Tuesday, December 30, 2014

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று 31 ஆம் திகதி 5 இடங்களில் கூட்டங்கள்

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து
இன்று 31 ஆம் திகதி 5 இடங்களில் கூட்டங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று 31 ஆம் திகதி  ஐந்து இடங்களில் கூட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இதன்படி ஆனமடுவ, புத்தளம், சிலாபம், குளியாபிட்டி, கம்பஹா, ஆகிய இடங்களில் இந்தக் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வங்காள தேசத்தில் ஜமாஅத் கட்சி தலைவர் அசாருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை

வங்காள தேசத்தில்  ஜமாஅத் கட்சி தலைவர்
அசாருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை



வங்காள தேசத்தில் ஜமாஅத் இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் .டி.எம். அசாருல் இஸ்லாம் (வயது 62). 1971-ம் ஆண்டு, அந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, கொலைகள், சித்ரவதைகள், கற்பழிப்புகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்ததாக அசாருல் இஸ்லாம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை டாக்காவில் உள்ள சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் விசாரித்தது.
விசாரணை முடிவில், அசாருல் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கருதிய நீதிபதி இனாவத்தூர் ரகீம் தலைமையிலான அமர்வு, அவருக்கு மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 158 பக்கங்களை கொண்ட தீர்ப்பில், ராங்பூரில் 1,200 க்கும் மேலான மக்களை படுகொலை செய்த அசாருல் இஸ்லாமை மரணம் அடையும் வரையில் தூக்கில் போடும்படி கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் போர்க்குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 16-வது நபர் என்ற பெயரை அசாருல் இஸ்லாம் பெறுகிறார்.

அசாருல் இஸ்லாமின் வக்கீல் பேசுகையில், "போர் நடந்தபோது அசாருல் இஸ்லாம் 19 வயது மாணவர், அவர் போர்குற்றத்தில் ஈடுபட எந்தஒரு வழியும் இல்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானது மற்றும் ஜோடிக்கப்பட்டது," என்று கூறியுள்ளார். இதற்கிடையே தீர்ப்புக்கு எதிராக, ஜமாத் இஸ்லாமி கட்சி இரண்டு நாட்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 உடல்கள் மீட்பு உறவினர்கள் கண்ணீர்

ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில்
40 உடல்கள் மீட்பு

உறவினர்கள் கண்ணீர்

காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 உடல்கள் ஜாவா கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக தகல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து உடல்களை மீட்கும் நடவடிக்கையில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
இதனை ஏர் ஏசியா தலைமை அதிகாரி சுர்பையா மேயர் ரிஷ்மகரினி டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். தனது இரங்கல் செய்தியில் , " அவர்கள் நம்மவர்கள் அல்ல. கடவுளுக்கு சொந்தமானவர்கள்எனவும் கூறியுள்ளார்
 இந்த தகவலை கேட்டு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த துயர சம்பவத்தால் சிங்கப்பூர், இந்தோனேஷிய மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். உறவுகளை இழந்த மக்கள், கதறி அழும் காட்சிகள் காண்போரை நெஞ்சுருக செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏர் ஏசியா நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் இந்தோனேசியாவின் சுரபாயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு, உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு (இலங்கை நேரப்படி அதிகாலை 3.50 மணி) புறப்பட்டது. இதில் 155 பயணிகள், விமானிகள் உள்பட 7 ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் இருந்தனர்.
பயணிகளில் 16 குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தலா ஒருவர், கொரியா நாட்டைச் சேர்ந்த மூவர் இருந்தனர்.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், வானிலை காரணமாக மாற்றுப் பாதையில் பறக்க அனுமதி கேட்டு விமானிகள், கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டனர்.
இந்நிலையில், புறப்பட்ட 42 நிமிடங்களில் விமானத்திலிருந்து தகவல் துண்டிக்கப்பட்டு மாயமானது. அந்த விமானம் கடலில் நொறுங்கி விழுந்ததை ஆஸ்திரேலிய விமானிகள் உறுதி செய்தனர். மாயமான ஏர் ஏசியா விமானத்தைத் தேடும் பணியில் சுமார் 30 கப்பல்களும், 15 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஈடுபட்டு  வந்தன.

இந்நிலையில், தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இந்தோனேசியாவின் ஜவா கடல் அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பதாக அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை தலைவர் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் ஏராளமான உடல்களும் மிதப்பதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஹெர்குலிஸ் போர் விமானத்தின் லெப்டினன்ட் டிரை விபோவை கூறுகையில், காலை 5மணி நேர தேடுதல் முயற்சிக்குப் பின்னர், கடலில் விமான பாகங்கள் போன்றவை மிதப்பதை கண்டுபிடித்தோம். விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் போர்னியோவின் கரிமட்டா ஜலசந்தி பகுதியில் மிதப்பதையும் கண்டோம். எனத் தெரிவித்துள்ளார். ஜாவா கடலின் பங்கலான் பன் பகுதியில் மிதப்பது ஏர்ஏசியா விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தோனேஷிய மீட்புக் குழு அதிகாரிகள் கூறும்போதுவிமானம் காணாமல் போன கடல் பகுதியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அப்பகுதியில் இன்னும் உடல்கள் மிதக்கின்றன. அவை நெருங்க முடியாத அளவிற்கு உள்ளன. இந்த உடல்களை மீட்பதற்கு இந்தோனேஷிய கடற்படை கப்பல் வரவழைக்கப்பட்டு உள்ளது. எனத் தெரிவித்துள்ளனர். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.











Monday, December 29, 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மைத்திரிக்கு ஆதரவு

தமிழ் தேசியக் கூட்டமைப்புஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார் .
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் உரையாற்றும் போதே அவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.
  இதேவேளை இன்றைய தினம் பொது எதிரணியினர் வடபகுதியில் தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு  மைத்திரிபால சிறிசேனா நேற்றைய தினம் அழைப்பு  விடுத்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.