Saturday, January 31, 2015

ஆணாக இருந்து பெண்ணாக உருமாறும் முன்னாள் ஒலிம்பிக் வீரர் புரூஸ் ஜென்னர்

ஆணாக இருந்து பெண்ணாக உருமாறும்
முன்னாள் ஒலிம்பிக் வீரர் புரூஸ் ஜென்னர்


அமெரிக்காவின் முன்னாள் தடகள வீரர் மற்றும் தற்பொழுது பேச்சாளர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொழிலதிபராக இருப்பவர் வில்லியம் புரூஸ் ஜென்னர். 65 வயதான இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு நடந்த கோடை கால ஒலிம்பிக்கில் டெகாத்லான் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர்
இது மாத்திரமல்லாமல் இவர் தடகள வீரர் என்ற நிலையில் இருந்து தொலைக்காட்சி தொடரில் அவர் நடிக்க ஆரம்பித்தார்இவருக்கு கிறிஸ்டீ கிரவுன்ஓவர், லிண்டா தாம்ப்சன் மற்றும் கிறிஸ் ஜென்னர் என 3 மனைவிகள் உள்ளனர்இவர், பர்ட், கேசீ, பிராண்டன், பிராடி, கெண்டால் மற்றும் கைலீ ஆகிய 6 பேருக்கு தந்தையும் ஆவார்.
இந்நிலையில், இவர் பெண்ணாக உரு மாற்றம் செய்ய உள்ளதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுஅவரது குடும்பத்தினரும் அவரின் நெருங்கிய வட்டாரமும், அவர் விரைவில் பெண்ணாக தனது வாழ்க்கையை வாழ்வார் என்பதை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜென்னர் பெண்ணாக மாறி வருகிறார்அவர் இறுதியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்அவர் செய்வதை அவரது குடும்பமும் ஏற்று கொண்டுள்ளது  என தகவல் தெரிவிக்கின்றதுஜென்னர் நீண்ட முடியுடன், அலங்காரம் செய்யப்பட்ட நகங்கள் மற்றும் பெரிய மார்பகங்களுடன் சமீப காலங்களில் காணப்பட்டு வந்தார்.

அவர் மெல்ல உருமாறி வந்து தனது குடும்பத்தினர், தனது புதிய தோற்றம் மற்றும் புதிய வாழ்க்கையை ஏற்று கொள்ள அவகாசம் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டார் என தகவல் கூறுகிறதுஅவரது பெண்ணாக மாறும் ஆர்வமானது புது பொலிவு பெறும் வகையில், இன் டச் நாளிதழில் ஒரு பெண்ணாக எனது வாழ்க்கை என பொருள்பட அட்டையில் பெண் உடையில் தோன்றினார் ஜென்னர்.
அவரது குழந்தைகளும், எங்களது தந்தை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என கூறியுள்ளனர்ஜென்னரின் 3வது மனைவியான கிறிஸ் ஜென்னரின் மகளும், பிரபல நடிகையுமான கிம் கர்தேசியன், ஜென்னர் தனது தனிப்பட்ட வாழ்க்கை பயணம் குறித்து விரைவில் வெளியிடுவார்.

அவர் இதுவரை தான் பார்த்திராத வகையில் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என கூறியுள்ளார்அதிக மகிழ்ச்சியில் பரவசமாகியுள்ளார்அவர் இருளான நாட்களில் வாழ்ந்து வந்த நிலையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளார் என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களுக்கான புகைப்பரிசோதனை நிறுத்தப்பட வேண்டும்!


மோட்டார் சைக்கிள்களுக்கான புகைப்பரிசோதனை
நிறுத்தப்பட வேண்டும்!
புதிய அரசு இவ்விடயத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்


வாகனங்களின் புகை பரிசோதிக்கப்பட வேண்டிய கட்டாய கடப்பாடு கைத்தொழில்மய நாடுகளுக்கு உண்டு..எமது நாடு ஒரு விவசாய நாடு.இங்கு வளிமண்டலமாசு தொடர்பான முறைப்பாடுகள் பெரிய அளவில் இல்லை. கொழும்பு, கண்டி போன்ற மாநகரங்களில் புகைப்பரிசோதனை செய்யப்படுவதில் ஓரளவு நியாயம் இருக்கலாம்.
மாறாக தாவரப் போர்வையால்சூழப்பட்டுள்ள கிராமப் பகுதிகளிலும் வாகனப்புகைப் பரிசோதனை செய்யப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது. பெற்றோல் வாகனங்களில் புகை குறைவானது,ஆனால் டீசல் வாகனங்களில் புகை அதிகமானது. பஸ், லொறி, கெண்டர், பாரவூர்தி போன்றன அதிக புகை விடுபவை.

ஆனால், நடுத்தர வருமானமுள்ள மக்களின் மோட்டார் சைக்கிள்களுக்கும் புகைப் பரிசோதனைக்காக செலவு செ;ய்ய வேண்டி உள்ளது. இது இவர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைப்பற்றி அதிகம் சிந்திக்கும் புத்தஜீவிகளைக்கொண்ட புதிய அரசு இவ்விடயத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும் .ஒரு சிலரின் தேவைக்காக இப் புகைப்பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டதா? என்றகேள்வி மக்கள் மனதில் உள்ளது.

நியூசிலாந்துடனான ஒரு நாள் போட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அப்ரிடியின் அதிரடி ஆட்டம் வீண்

நியூசிலாந்துடனான ஒரு நாள் போட்டி
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி
அப்ரிடியின் அதிரடி ஆட்டம் வீண்




நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இன்று வெலிங்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பிரெண்டன் மெக்கல்லம் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். கைல் மில்ஸ், போல்ட், அதிவேக வீச்சாளர் மில்ன ஆகியோர் மிகச்சிறப்பாக வீசியதோடு நியூசிலாந்தின் பீல்டிங் அதி அற்புதமாக அமைந்தது. “இந்த சீசனில் இது போன்று பீல்டிங் செய்ததில்லைஎன்று பிற்பாடு பிரெண்டன் மெக்கல்லம் பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் 45.3 ஓவர்களில் 210 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பதிலுக்கு விளையாடிய நியூசிலாந்து 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை துணைக்கண்டத்தில் இதற்கு சற்று முன்னர் 2-3 என்று இழந்த பாகிஸ்தான் சரியான தயாரிப்பில் இல்லை என்பது தெரிந்தது. மேலும் நியூசிலாந்து அணி இலங்கையை 4-2 என்று வெற்றி பெற்று அதிரடி ஃபார்மில் உள்ளது.
இன்னிங்ஸ் தொடங்கியவுடன் கைல் மில்ஸ் வீசிய முதல் ஓவரில் முகம்மது ஹபீஸ் பவுல்டு ஆனார். மில்ஸின் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனதால் பாகிஸ்தான் திணறியது மேலும் மில்ஸ் யூனிஸ் கான் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

டிரெண்ட் போல்ட், அகமது ஷெஜாத் (15) விக்கெட்டை வீழ்த்தினார். ஷேஜாத் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு ஹாரிஸ் சொஹைல் (23), உமர் அக்மல் (13), சர்பராஸ் அகமட் (5) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். 36-வது ஓவரில் பாகிஸ்தான் 127/6 என்று ஆனது.
127/6 என்ற நிலையில் மிஸ்பா உல் ஹக் 74 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் சகிதம் 52 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வந்தார். அப்ரிடி 1 பவுண்டரியுடன் 6 ஓட்டங்களில் இருந்தார்.
முதலில் மில்னவின் பந்தை 2 அபார பவுண்டரிகளை அடித்தார் அப்ரிடி. ஆனால் அதற்கு அடுத்த ஓவரில் ஆண்டர்சன் வீசிய ஒரு பந்தை மிட் ஆனை நோக்கி தூக்கி அடிக்க முயன்றார் அப்ரிடி, ஆனால் பந்து டாப் எட்ஜ் ஆகி மேலெழும்பியது. மெக்கல்லம் அதனை பின்னால் ஓடிச் சென்று பிடிக்க முயன்று கோட்டை விட்டார். அதில் 2 ஓட்டங்கள். பிறகு அடுத்த பந்து ஆண்டர்சன் வீசிய மெதுபந்து ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் ஆனது. 39-வது ஓவரில் மீண்டும் மில்ன பந்தை 2 பவுண்டரிகள் விளாசினார் அப்ரிடி, அடுத்த ஆண்டர்சன் ஓவரில் மீண்டும் இரண்டு அபார பவுண்டரிகள்.
பிறகு நேதன் மெக்கல்லம் விச வந்தவுடன், நேராக மேலேறி வந்து சிக்சர் விளாசினார். பிறகு ஒரு காலை மடக்கிக் கொண்டு கவர் திசையில் மீண்டும் ஒரு பூம் பூம் அப்ரிடி ஷாட் பந்து சிக்சர் செல்ல 21 பந்துகளில் அரைசதம் எட்டினார் அப்ரிடி.
மிஸ்பா உல் ஹக் இந்த ஜோடி சேர்ப்பில் ஒற்றை இலக்க பங்களிப்பையே செய்ய முடிந்தது. அவர் 58 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 8 ஓவர்களில் 71 ஓட்டங்கள் சேர்த்தனர்.
அதன் பிறகு மீண்டும் சரிவடைய. அப்ரிடி 29 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 67 ஓட்டங்கள் எடுத்து 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் கிராண்ட் எலியட் 3 விக்கெட்டுகளையும், மில்ஸ், போல்ட், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் 210 ஓட்டங்களில் சுருண்டது.


7 அடி உயர முகம்மது இர்பார்ன், பிலாவல் பட்டி, ஈசான் அடில் ஆகியோர் எந்த வித இலக்குமில்லாமல் வீசினர். மெக்கல்லம் 17 ஓட்டங்களை 12 பந்துகளில் அடித்துவெளியேறினார். டாம் லோதம் 23 ஓட்டங்களையும், மார்டின் கப்தில் 39 ஓட்டங்களையும் எடுத்தனர். நியூசிலாந்து 18 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்தது. பாகிஸ்தானோ 29-வது ஓவரில்தான் 100  ஓட்டங்களைக் கடந்தது.

அதன் பிறகு கிராண்ட் எலியட் (64 ஓட்டங்கள் 68 பந்து 8 பவுண்டரி), ராஸ் டெய்லர் (59) ஆகியோர் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக மிக அனாயசமாக 112 ஓட்டங்களை 21 ஓவர்களில் சேர்க்க நியூசிலாந்து 39.3 ஓவர்களில் 213/3 என்று வெற்றி பெற்றது. அப்ரிடி பந்து வீச்சிலும் சிக்கனம் காட்டி 39 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக கிராண்ட் எலியட் தேர்வு செய்யப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ ஓய்வு


டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மேற்கு இந்திய தீவுகள் அணியின்
ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ ஓய்வு


மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான அணியில் டிவைன் பிராவோ தேர்வு செய்யப்படவில்லை. இதனால் கிளைவ் லாய்ட் உள்ளிட்டோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த 4 ஆண்டுகளாக பிராவோ அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
தனது ஓய்வு பற்றி பிராவோ கூறும்போது, “நான் சில ஆண்டுகளாக மேற்கு இந்திய தீவுகளுக்காக உற்சாகமாக விளையாடி வந்தேன். மேற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறேன் என்ற ஆழமான உணர்வில் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தேன்எங்கள் அனைவருக்கும் இது கடினமான காலம் என்பதை நான் அறிவேன்என்று தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார் பிராவோ.
40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 2,200 ஓட்டங்களை 31 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும். குறிப்பாக 2005-இல் ஆஸி.க்கு எதிராக இவர் எடுத்த 113 ஓட்டங்கள் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. 86 டெஸ்ட் விக்கெட்டுகளையும் இவர் கைப்பற்றியுள்ளார்.

இவரது அபார பந்து வீச்சு மற்றும் பின்னால் களமிறங்கி ஆடும் முக்கியமான பேட்டிங் இன்னிங்ஸ்கள், அனைத்தையும் விட அபாரமான பீல்டிங்கிற்காக எப்போதும் இவரை நினைவில் வைத்துக் கொள்ளும்படியாக உற்சாகத்துடன் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர்
கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.  
கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு   அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் , அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு உள்ளது.  
இந்த நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்கு மாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  
இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு ஆட்சி அமைக்கப்படவுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இதேவேளை கிழக்கில் அமையவுள்ள மாகாண அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் தேவைஇது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தனுடனும் நாம் பேசுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு ஆட்சியை நிறுவும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பத்தத்தில் பிந்திய இரண்டரை வருடங்களுக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவது என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை தற்போது அமுல்படுத்துவதன் மூலம் கிழக்கின் தற்போதைய ஆட்சி இழுபறிக்கு தீர்வினைக் காண முடியும் என்று அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கட்சியின் இத்தீர்மானத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கும் பொருட்டு எந்த நேரத்திலும் தாம் ராஜினாமா செய்யத் தயார் என முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அக்கூட்டத்தில் உறுதியளித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களுள் யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பது தொடர்பில் குறித்த உறுப்பினர்கள் மத்தியிலும் கட்சியின் முக்கியஸ்தர்களிடமும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அபிப்பிராயங்களை கேட்டறிந்து வருகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களின் முக்கிய கூட்டம் மருதமுனை கலாசார நிலையத்தில் இடம்பெற்றபோது


முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட
மத்திய செயற்குழு உறுப்பினர்களின் முக்கிய கூட்டம்

மருதமுனை கலாசார நிலையத்தில் இடம்பெற்றபோது


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களின் முக்கிய கூட்டம் கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவரும் கல்முனை மாநகரசபையின் பிரதி மேயருமான அப்துல் மஜீட் தலைமையில் மருதமுனை கலாசார நிலையத்தில் இடம்பெற்றபோது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் அம்பாறை மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




Friday, January 30, 2015

பாகிஸ்தானில் ஷியா பள்ளிவாசலில் பயங்கர குண்டு வெடிப்பு 40 பேர் பலி!

பாகிஸ்தானில் ஷியா பள்ளிவாசலில்
பயங்கர குண்டு வெடிப்பு 40 பேர் பலி





பாகிஸ்தான் நாட்டில் ஷியா பள்ளிவாசல் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகர்பூர் (Shikarpur)  நகரில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக நடந்த, கொடூர குண்டுவெடிப்பு தாக்குதலில்40பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் 50க்கும மேற்பட்டோர் படுகாயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


At least 40 people have been killed in a bomb blast at a Shia mosque in southern Pakistan, officials say.
Dozens were wounded in the attack after Friday prayers in Shikarpur district of Sindh province, and the death toll is expected to rise.
Sunni militants linked to the Pakistani Taliban said they carried out the attack.
Local media reports suggest that the blast could have been a suicide attack, but police are investigating.
There has been rising sectarian violence in Pakistan in recent years. Sunni militant groups have targeted the Shia minority in the past.
The Jundallah militant group claimed that they had carried out the attack. The group has been linked to Tehreek-e-Taliban Pakistan (TTP) and announced allegiance to Islamic State (IS) last year.
A number of people were trapped after the roof of the mosque collapsed due to the force of the explosion, local media said.
Witness Zahid Zoon told AFP news agency that hundreds of people rushed to the scene after the blast to try to dig out survivors from the rubble. "It is chaos," he said.

தீ விபத்தில் தந்தையும் இரண்டு வயது குழந்தையும் தீயில் கருகி உயிரிழப்பு

தீ விபத்தில் தந்தையும் இரண்டு வயது குழந்தையும்

தீயில் கருகி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டியில் உள்ள  இஸ்மாயில் புரத்தில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்தில் தந்தையும் இரண்டு வயது குழந்தையும் தீயில் கருகி வபாத்தாகியுள்ளனர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த சின்னத்தம்பி ஆதம்லெப்பை ( 43வயது ) மற்றும் இவரது இரண்டு வயது ஆண் குழந்தை  றியான் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் தீயினால் படுகாயமடைந்து றியா (வயது 5) ஆபத்தான நிலையில் அம்பாறை போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.




தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பிரபல்யமான பாடசாலைகளில் சேர்த்துகொள்வதற்கான வெட்டுப்புள்ளி

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை

பிரபல்யமான பாடசாலைகளில் சேர்த்துகொள்வதற்கான

வெட்டுப்புள்ளி



தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை நாட்டிலுள்ள பிரபல்யமான பாடசாலைகளில் சேர்த்துகொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வியமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு :-



சவூதி அரேபிய பயணத்தின் போது மிஷேல் `ஸ்கார்ப்’ அணியாதது ஏன்?

சவூதி அரேபிய பயணத்தின் போது

மிஷேல் `ஸ்கார்ப் அணியாதது ஏன்?

- அமெரிக்க ஜனாதிபதி மாளிகை சிரேஸ்ட அதிகாரி விளக்கம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவியர் லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்தபோது ஸ்கார்ப் அணியவில்லை, அதையே மிஷேல் ஒபாமாவும் பின்பற்றியுள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி மாளிகை சிரேஸ்ட செய்தித் தொடர்பாளர் எரிக் சல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மூன்றுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வும் அவரது மனைவி மிஷேல் ஒபாமாவும் கடந்த 27ஆம் திகதி  சவூதி அரேபியாவுக்கு சென்றனர்.
அப்போது மிஷேல் ஒபாமா தனது கூந்தலை மறைக்கும் வகையில் ஸ்கார்ப் அணியாதது ஏன் என்று அவருக்கு எதிராக ட்விட்டரில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மிஷேல் ஸ்கார்ப் அணியாததால் அந்த நாட்டு அரசு தொலைக் காட்சியில் அவரது உருவத்தை மங்கலாக்கி ஒளிபரப்பியதாக செய்தி வெளியானது. இதனை சவூதி அரேபிய வெளியுறவுத்துறை ஏற்கனவே மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சிரேஸ்ட அதிகாரிகள் கூறியபோது, மிஷேல் சவூதிக்கு வந்தது முதல் மன்னர் சல்மானை சந்தித்தது வரை அனைத்தையும் சவூதி அரசு தொலைக்காட்சி முழுமையாக ஒளிபரப்பியது. அவரது உருவம் மங்கலாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மிஷேலுக்கு எதிராக  ட்விட்டரில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. எனினும் மேற்கத்திய ஊடகங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.
சவூதிக்கு சென்றபோது உடல் முழுவதையும் மறைக்கும் வகை யில் மிஷேல் கண்ணியமாக உடை அணிந்திருந்தார். அவர் எந்த தவறும் இழைக்கவில்லை, இந்த விஷயத்தை சமூக வலைத்தளங்களில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லைஎன்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மிஷேல் ஒபாமா கருத்து தெரிவிக்க  மறுத்துள்ளார். எனினும் அமெரிக்க ஜனாதிபதி மாளிகை சிரேஸ்ட செய்தித் தொடர்பாளர் எரிக் சல்ட்ஸிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளிக்கும்போது, இதற்கு முன்பு முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவியர்களான  லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சவூதி சென்றபோது ஸ்கார்ப் அணியவில்லை. அதையே மிஷேலும் பின்பற்றியுள் ளார். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.