Saturday, February 28, 2015

பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 33/2

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 33/2

உலகக் கிண்ணக்கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமான 23-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை (பி பிரிவு) எதிர்கொள்கிறது.
இதில் நாணயச் சுழற்சியில்  வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் உலக க் கிண்ணப் போட்டிகளில் இதற்கு முன்பு 5 தடவை சந்தித்துள்ளன. இதில் ஒருமுறை கூட ஜிம்பாப்வே அணி வெற்றி கண்டதில்லை. பாகிஸ்தான் அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. தற்போது நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் இதுவரை இரண்டு ஆட்டத்தில் விளையாடிவுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிப்பெற்றால் மட்டுமே அந்த அணி காலிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் அந்த அணி வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே அணி ஒரு ஆட்டத்தில் வெற்றியும், 2 ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளது.  
பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 33 ஓட்டங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.




No comments:

Post a Comment