Saturday, February 28, 2015

இந்திய வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டம்

இந்திய வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள்
புறக்கணிக்கப்படுவதாக சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டம்

இந்திய வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாணத்து. முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது.

அரசே! சொந்த மண்ணில் எங்களைக் குடியேற்று, 

பாரபட்சமற்ற நீதியான குடியேற்றம் வேண்டும்

1990.10.30 ல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களுக்கு தனியான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து எங்களுக்கு நடந்த அநியாயங்களை விசாரியுங்கள், 

அரசே! 100 நாள் வேலைத்திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்,

1990 – 1997 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் காணாமல் போன முஸ்லிம்களின் முடிவு என்ன? 

இந்திய வீட்டுத் திட்டத்தில் வட மாகாண முஸ்லிம்களுக்கு சதி,

இந்திய வீட்டுத் திட்டத்தில் காலத்தை இழுத்தடித்து இறுதியில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் கழுத்தை அறுத்த பிரதேச செயலாளரே ஒழிக! 

என்ற வாசககங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் ஏந்தியிருந்தனர்.
படங்கள் - பா.சிகான்










No comments:

Post a Comment