Sunday, February 1, 2015

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முதல் வெளிநாட்டு பயணமாக எதிர்வரும் 16-ஆம் திகதி இந்தியா செல்கின்றார்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

முதல் வெளிநாட்டு பயணமாக

எதிர்வரும்  16-ஆம் திகதி இந்தியா செல்கின்றார்


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இரண்டு நாள் பயணமாக, எதிர்வரும்  16 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் இந்திய  பயணத்திற்கான திகதியை இரு நாடுகளும் கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளன என அறிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதியின் இந்தியப்  பயணத்தைத் தொடர்ந்து,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 13 ஆம் திகதி இலங்கை வருகின்றார். இலங்கையில் மூன்று நாள்கள் பயணம் மேற்கொள்ளும்  பிரதமர் மோடி, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் , ஜனாதிபதியாகப்  பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment