Sunday, February 1, 2015

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அதிகாரத்தில் இருக்கும்போது செய்த இரண்டு மடத்தனங்களுக்கு பிராயச்சித்தம்!



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

அதிகாரத்தில் இருக்கும்போது செய்த

இரண்டு மடத்தனங்களுக்கு பிராயச்சித்தம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் ஆட்சியில் இருந்தபோது மூன்று மடத்தனங்களை செய்துவிட்டதாக பகிரங்கமாகக் கூறியிருந்தார். அதற்கு அவர் பிராயச்சித்தம் தேடுவது போல் காரியங்களைக் கச்சிதமாக முடித்துவிட்டு தற்போது சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கின்றார் என அறிவிக்கப்படுகின்றது.
தான் அதிகாரத்தில் இருக்கும்போது ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை தனது அதிகாரத்தைக் கொண்டு இரண்டு வருடத்திற்குள் கலைத்து விட்டமை.
மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்தமை.
மூன்றாவது மடத்தனத்தை தற்போது நான் இப்போதைக்கு கூறமாட்டேன் என்று அவர் கூறியிருந்தார்.
அவரின் மடத்தனமான அந்த செயல்பாடுகளுக்கு அவரே பிராயச்சித்தமாக ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக்குவதற்கு வழி அமைத்துக் கொடுத்திருப்பதுடன்  அவர் அன்று கூறாமல் இருந்த மூன்றாவது மடத்தனத்திற்கும் பரிகாரம் செய்து அதில் வெற்றியும் கண்டு களிப்புடன் காணப்படுகின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சபாஸ் சந்திரிகா அம்மையாரே


No comments:

Post a Comment