Saturday, February 28, 2015

ஐ. நா. சபையின், அரசியல் விவகாரத் திணைக்களத்தின் துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று சந்தித்தார்

ஐ. நா. சபையின், அரசியல் விவகாரத் திணைக்களத்தின்

துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன்
அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று சந்தித்தார்


ஐக்கிய நாடுகள் சபையின், அரசியல் விவகாரத் திணைக்களத்தின் துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று 28 ஆம் திகதி சனிக்கிழமை மாலை அவரது இல்லத்தில் சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்புகள் என்பன குறித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகளின் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும், மனிதாபிமான இணைப்பாளருமான சுபினே நண்டி, ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைமை அதிகாரி மேரி யமஷிடா ஆகியோரும் பங்குபற்றினர்.



No comments:

Post a Comment