Sunday, March 1, 2015

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை வினவும் பிரதம அமைச்சரின் அலுவலகம்

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக
பொதுமக்களின் கருத்துக்களை வினவும்

பிரதம அமைச்சரின் அலுவலகம்

தற்போதய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் சம்மந்தமாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக விசேட பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பங்கேற்புடன் மிகவும் பயன்மிக்க வினைத்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வகையில் இந்த வேலைத் திட்டத்தினை வெற்றிபெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான பூரண விபரங்கள் தகவல்கள் மற்றும் அதன் தற்போதய நிலைமை என்பனவற்றை www.pmmgov.lk எனும் இணையத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான உங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், பிரேரணைகள் குற்றச்சாட்டுக்களை பணிப்பாளர் நாயகம், செயற்றிட்ட முகாமைத்துவம், மற்றும் கண்காணிப்புத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கிக் கட்டடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு – 01 எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கமுடியும். இணையத்தளத்தின் ஊடாக தெரிவிப்பதாயின் 100daysfeedback@pmm.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தெரிவிக்கலாம். தொலைபேசி ஊடாகத் தெரிவிப்பதாயின் 0112477915 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும்.


No comments:

Post a Comment