Tuesday, March 31, 2015

உலகிலேயே மிக வயதான ஜப்பான் பெண்மணி 117 வயதில் காலமானார்

உலகிலேயே மிக வயதான ஜப்பான் பெண்மணி
117 வயதில் காலமானார்



உலகின் வயதான பெண் என்று கருதபட்டவர் ஜப்பானை சேர்ந்த  மிசாவோ ஒகாவா. இவர் தனது தனது 117 வயதில் காலமானார். உள்ளூர் நேரப்படி  இன்றுகாலை 7 மணிக்கு இறந்தாக அவர் தங்கி இருந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  19ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிரோடு வாழ்ந்து வந்தவர்களில் ஒருவராக இவர்  இருந்தார்.
மிசாவோ ஒகாவா மார்ச் 5, 1898 ஆண்டு பிறந்தார். இவர் தனது 1919 ஆண்டு யூகியோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.ஒகாவா பிறந்து ஐந்து ஆண்டுகளில் ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை கண்டுபிடித்தனர். அவர் பருவ வயதில் இருக்கும் போதுதான் முதலாம் உலகப்போர் ஆரம்பம் ஆனது. மேலும் அவரது 70 வயதில் தான் மனிதன் முதலில் நிலவில் இறங்கினான்.இவரது கணவர் 1931 ஆம் ஆண்டே இறந்து விட்டார். இவருக்கு 4 பேரக்குழந்தைகளும்  6 கொள்ளு பேரங்குழந்தைகளும் உள்ளனர்.
2013 ஆம் ஆண்டு 114 வயதில் இவர் உலகின் மிக அதிக வயதான பெண் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். ஜப்பான் மக்கள் உலகில் நீண்ட ஆயுள் உடையவர்கள் என்று அறியப்பட்டுள்ளனர். இப்பொது மிசாவோ ஒகாவா இறந்துள்ளதால் அமெரிக்காவை சேர்ந்த 116 ஜெர்டுர் வியவர் என்பவர் உலகின் மிக அதிக வயதான பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்
 ஒகாவாவின் மகள் கிமினோ மேக்கர் கூறும் போது  மார்ச் மாதம் பிறந்தநாள் கொண்டாடினோம்  சிறிது நாளிலேயே இறந்து விட்டார் என கூறியுள்ளார்.

இவர். கடந்த 10 நாட்களாக பசி எடுக்காமல் இருந்ததாகவும் இன்று காலை அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மூதாட்டியின் பேத்தி தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.



தகுதியான அதிபர் ஒருவரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை - மூத்த போராளியின் விளக்கம்

சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்திற்கு
தகுதியான அதிபர் ஒருவரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை
மூத்த போராளியின் விளக்கம்

மேற்படி தலைப்பில் மக்கள் விருப்பம் இணையத்தளத்தில் ஆக்கமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாக்கத்தை வாசிக்க முன்னர் சில விளக்கங்களை சம்மாந்துறை மக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் ஏறத்தாழ 10 வருடங்களுக்கு மேல் உயர்தர வகுப்புக்களிட்கு கற்பித்த அதிபர் தரத்தை கொண்ட, ஆளுமைமிக்க ஒரு ஆசிரியரை அப்பாடசாலைக்கு அதிபர் பதவிக்கு பொருத்தமானவர் என கருதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ எம்..எம்.மன்சூர் அவர்கள் குறித்த அதிபர் தரத்தை கொண்ட, ஆளுமைமிக்க ஆசிரியரை அதிபர் பொறுப்பில் நியமிக்க நடவடிக்கை எடுத்திருந்ததுடன் அவரும் அதிபராக பொறுப்பேற்று இருந்தார்.
சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்திற்கு ஒரு ஆளுமைமிக்க சிறந்த அதிபர் நியமிக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாத சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் .எம்.நௌசாத் அவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்,தான் வகித்து வரும் ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியின் அமைப்பாளர் என்ற பதவியையும் கடந்து, முன்னைய அரசாங்கத்தோடு கொண்டிருந்த உறவின் நிமித்தம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரின் அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த நியமனத்தை இரத்துச் செய்திருந்தார்.
.குறித்த நியமனத்தை இரத்துச் செய்திருந்தது மாத்திரமன்றி எந்தவித முன்னனுபவமும் இன்றிய, ஆளுமையில்லாத ஒருவரை அதிபர் பொறுப்பில் அமர்த்தியதன் காரணமாகவே சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு காரணமாக அமைந்தது என்பதை தாழ்மையுடன் கல்விச் சமுகத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை மிக விரைவில் சீர்செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் கௌரவ எம்..எம்.மன்சூர் அவர்கள் எடுக்க வேண்டும் என மூத்த போராளி முகநூல் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் விருப்பம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆக்கமானது கீழே தரப்படுகின்றது.
சம்மாந்துறை வலயத்தின் சம்மாந்துறை கோட்டக் கல்வி பிரிவுக்குள் அமைந்திருக்கும் அல்-அர்ஷத் மகா வித்தியாலயம் தகுதிவாய்ந்த அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகம் இல்லாது தள்ளாடி தளர்ந்து வருவதாகவும், அங்கு அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதாகவும் பிரதேசவாசிகளும், பாடசாலை நலனில் அக்கறை கொண்டவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயம் ஆரம்ப பிரிவில் 616 மாணவர்களையும், இடைநிலை-உயர்தரப் பிரிவுகளில் 1023 மாணவர்களையும் கொண்டு மொத்தமாக 1639 மாணவர்களோடும், 77 ஆசிரிய-ஆசிரியைகளோடும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரு IC தர பாடசாலையாகும். இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் 07.11.2014 அன்று பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளதனால் இப்பாடசாலையின் தரத்திற்கு ஏற்ற அதிபர் இல்லாது தற்காலிகமாக ஒரு அதிபரை நியமித்திருப்பதாகவும் அவர் இப் பாடசாலை வளர்ச்சியில் கவனம் செலுத்தாது தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் என சிலர் வீட்டில் இருந்து கொண்டு கூடிக் கதைப்பது போல் பாடசாலையில் கதைத்துக் கொண்டிருப்பதாகவும், பாடசாலையில் உள்ள ஒரு சில ஆசிரியர்களின் பொடுபோக்குத்தனத்தை அதிபர் கண்டிக்காதும், தகுந்த நடவடிக்கை எடுக்காதும் ஒரு ஸ்த்திரத்தன்மை அற்றிருப்பதாகவும் பல முறைப்பாடுகள் பாடசாலை நலனில் அக்கறை கொண்டவர்களால் முன்வைக்கப்படுகின்றது.
இப் பாடசாலை கஷ்ட பிரதேச பாடசாலை என்ற பிரிவில் இருப்பதனால் அரசாங்கத்தால் மேலதிகமாக கொடுக்கப்படும் கஷ்ட பிரதேச கொடுப்பனவுக்காக மாத்திரம் முண்டியடித்துக் கொண்டு இங்கு இடமாற்றம் பெற்று அதிகமான ஆசிரியர்கள் வருவதாகவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித கரிசனையற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இப்பாடசாலையில் உள்ள ஒரு சில ஆசிரிய-ஆசிரியைகள் மேற்படிப்புக்களையும், மேலதிக கற்கை நெறிகளையும் கற்றுக் கொண்டிருப்பதனால் இவர்கள் பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எந்நேரமும் நுாலகத்தில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டிருப்பதாகவும், மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்கு அவர்களை அழைக்கின்ற போது நீங்கஎல்லாம் படிச்சி என்னடா செய்ய போறிங்க என்று கூறுவதாகவும், குறிப்பாக ஆங்கில பாடத்திற்கு மாணவர்கள் அங்குள்ள ஆங்கில பாட ஆசிரியரை அழைத்தால்நீங்க எல்லாம் ஆங்கிலம் படிச்சி என்னத்த கிழிக்கப் போறிங்க என்று தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இப்பாடசாலையில் அதிகமாக வெளியூர் ஆசிரியர்கள் கடமையாற்றுவதனால் குறித்த வெளியூர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் ஆசிரியர்கள் காலம் தாழ்த்தி பாடசாலைக்கு வருவதாகவும் இது குறித்து பாடசாலை அதிபரோ-நிர்வாகமோ எந்தவித நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாடசாலையில் நுாலகம் இருக்கின்ற போதும் மாணவர்களின் பொதுஅறிவு விருத்திக்குத் தேவையான நாளாந்த பத்திரிகை செய்திகள் எதுவும் பெறப்படாதிருப்பதாகவும், அதற்குத் தேவையான நடவடிக்கைளை பாடசாலை நிர்வாகம் மேற்கொள்ளாதிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.
இவ்வாறு தள்ளாடிக் கொண்டிருக்கும் இப்பாடசாலையின் நிர்வாகம் இருக்கும் நிலையில் இப்பாடசாலை மாணவர்கள் எவ்வாறு புலமைப் பரீட்சையிலும், .பொத. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் சிறப்பான முறையில் சித்தியடைவார்கள்...??? மாணவ-மாணவிகளது கல்வி வளர்ச்சிக்கு பாடுபடாமல் அரசாங்கத்திடம் இருந்து மாதம் மாதம் கை நீட்டி சம்பளம் வாங்கும் இவர்களின் கொழுப்புக்களை கரைத்து இப்பாடசாலை கல்வி வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது சம்மாந்துறை மக்களின் கடமையல்லவா...???
ஒவ்வொரு வருடமும் சாதாரண தரத்திலும் சரி, உயர்தரத்திலும் சரி, ஐந்தாம் தர புலமைப் பரீ்ட்சையிலும் சரி மாணவர்கள் சித்தியடையும் வீதம் வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகின்றது என்பது இங்கு பகிரங்கமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே படிக்கக் கூடிய திறமை வாய்ந்த அப்பாவி மாணவ-மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளில் விளையாட்டாகவும், பொடுபோக்காகவும் இருக்கும் இப்பாடசாலை அதிபரையும் உப அதிபர் போன்றோரையும் மற்றும் பாடசாலை நிர்வாகத்தையும் மாற்றி இப்பாடசாலைக்கு சிறந்த தகுதி வாய்ந்த அதிபரையும், பாடசாலை நலன்களில் கூடுதல் அக்கறை செலுத்தி பாடசாலையின் கல்விவளரச்சியில் கூடுதல் கவனம் செலுத்தக் கூடிய புதிய பாடசாலை நிர்வாகத்தையும் அமைக்க வேண்டும் இது காலத்தின் மிக கட்டாயத் தேவையாக இருக்கின்றது.
இப் பாடசாலையின் அபிவிருத்தியில் அக்கறை கொண்ட இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி எழுதிய கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)


எனவே, இப்பாடசாலை மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் மாகாண கல்வி அமைச்சு போன்றோர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் விருப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டிநிற்கின்றது.



தாதி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு (படங்கள்)

தாதி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு


சுகாதாரத் திணைகளத்தின் தாதி, துணை மற்றும் பாராமெடிக்கல் சேவைகளுக்கு புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றபோது.








மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர். - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில்
திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர்.
-    சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை.    நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.   "போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர்.    அத்துடன் நாட்டைப் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலர் கடனாளியாக்கிச் சென்றுள்ளனர். அதுமட்டுமன்றி ஒப்பந்தகாரர்களுக்கு மேலும் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலரைப் பாக்கியாக கடந்த அரசு விட்டுச் சென்றுள்ளது'' என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.   "இது மிகப்பெரிய  தவறாகும். தற்போதேனும் போர் வெற்றியின் பயனை இந்த நாட்டுமக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவேண்டும். ஆனால்அதனைப் பெற்றுக்கொடுப் பதற்கு நடப்பு அரசுக்கு முன்பாக பெரும் சவால் உள்ளது'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ரணவிரு சேவா அதிகாரசபையால் நேற்று  பத்தரமுல்லையிலுள்ள அபே கமவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த படைவீரர்களின் தாயாருக்கான நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இங்கு தொடர்ந்து பேசுகையில்,
 "கடந்த காலத்தில் போர் தொடர்பாகவும் போர் வெற்றி தொடர்பாகவும் பெருமை பாடித் திரிந்த கூட்டமொன்றிருந்தது ஆட்சியாளர்கள் இருந்தனர். நாட்டுக்காக உயிர்துறந்த ஆயிரக்கணக்கான படையினரையும் அவர்களுக்குத் தலைமைத்துவம் கொடுத்த தளபதிகளையும் விட்டுவிட்டு  நான்தான் போரை வென்றேன் என்று தம்பட்டமடித்தனர்இந்த நாட்டிற்கு மீண்டும் சுதந்திரத்தைப் பெற்றுத்தருவதற்காகவும், உங்கள் பிள்ளைகளுக்கு அச்சமும் சந்தேகமுமற்ற நாட்டை உருவாக்கித் தருவதற்காகவுமே உங்களுடைய பிள்ளைகளும் கணவன்மாரும் உயிர்துறந்தனர்.   போர் வெற்றிகொள்ளப்பட்டது. நிச்சயமாக தெளிவாக வெற்றிகொள்ளப்பட்டது. பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டது. ஆனால், அதன் பிரதிபலன் யாருக்குக் கிடைத்தது.    எமது பிள்ளைகள் போரின்போது வீரத்துடன் போராடியதும் தமது உயிரை மாய்த்துக்கொண்டதும் அந்த சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வறுமையில் இருந்தும், பட்டினியில் இருந்தும் ஊழலில் இருந்தும் அச்சுறுத்தலில் இருந்தும் சுதந்திரமாக வாழ்வதற்காகவே.
."2009ஆம் ஆண்டு போர் வெற்றிகொள்ளப்பட்ட போதும் அதனால் எந்தவொரு சுதந்திரமும் எமக்குக் கிடைக்கவில்லை. கடந்த ஆறுவருடங்களாக படிப்படியாக இருந்த சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டது. ஒரு குடும்பம் மாத்திரமே அந்தச் சுதந்திரத்தை அனுபவித்தது.   அந்த குடும்பத்தைச் சூழ்ந்திருந்த கூட்டம் மட்டுமே அதனை அனுபவித்தது. போர் நிறைவுபெற்றதும் நாடொன்றில் கோடிக்கணக்கான நிதி திறைசேரியில் மிச்சமாகும்.    போரை வென்ற ஆட்சியாளர்கள் ஆறு வருடகாலத்தின் பின்னர் வீட்டிற்கு சென்றபோது திறைசேரிக்கு முற்றுமுழுதாக "பட்டை' போட்டுச்சென்றனர் (வங்குரோத்துநிலைக்கு தள்ளிவிட்டுச் சென்றிருந்தனர்.)    எங்கே அந்த நிதி? இவர்கள் காரணமாக எமது நாடு இன்று ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் கடனாளியாக மாறிவிட்டுள்ளது. ட்ரில்லியன் டொலர்கள் என்பது பத்தாயிரம் கோடி டொலர்களாகும். இலங்கை நாணயத்தில் பார்ப்பதென்றால், பத்தாயிரம் கோடிகளை 133 ரூபாவால் பெருக்க வேண்டும்.    போர் வெற்றியின் பலாபலன் எங்கே? யாருக்கு அந்தப் பலன்கள் கிட்டின? பொருள்களின் விலைகள் குறைந்திருக்கின்றனவா? அரச ஊழியர்களின் ஊதியம் அதிகரித்திருக்கின்றதா? இன்னமும் அதிகமானவர்களுக்கு நல்ல வேலை கிடைத்திருக்கின்றதா? இல்லையே.    ஒரு ட்ரில்லியன் டொலரால் நாட்டை கடனாளியாக்கிச் சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் மற்றுமொரு ட்ரில்லியன் டொலரால் அதாவது, பத்தாயிரம் கோடி டொலர்களை ஒப்பந்தக்காரர்களுக்குப் பாக்கியாக விட்டுச்சென்றுள்ளனர்.  
 வீதிகளையும் வடிகாலமைப்புகளையும் செய்வதற்கு ஒப்பந்தத்தைக் கொடுத்துவிட்டு பணத்தைக் கொடுக்காது சென்றுள்ளனர்அதனையும் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் தற்போதைய அரசின் மீதே சுமத்தப்பட்டுள்ளது.
 "அரசின் திறைசேரியில் பணத்தைப் பெற்று தமது பொக்கட்டுகளை நிரப்பிக்கொண்டனர். இது மிகப்பெரும் தவறாகும். போர் தொடர்பில் தம்பட்டம் அடித்து பாடித் திரிந்தவர்கள் அந்தப் பயனை இந்த நாட்டின் மக்களுக்கோ எதிர்காலப் பயணத்திற்கோ பெற்றுத்தரவுமில்லை விட்டுச்செல்லவுமில்லை.    அதுதான் மிகப்பெரிய தவறாகும். நான்தான் போரை வெற்றிகொண்டவன் என சிலர் தமது கிராமங்களில் சென்று கூச்சலிடுகின்றனர். தேர்தல் தோல்வியடைந்தும் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் பேராசையில் இப்படிச் செய்கின்றனர்.    உங்களுடைய பிள்ளைகளே போரை வென்றனர். நானும் இந்த நாட்டை 11 வருடங்கள் ஆட்சிசெய்தேன். நான் எப்போதும் தேர்தலில் தோற்கவில்லை. நான் இரு தவணைகளை முடித்துக்கொண்டு எனது தாய்தந்தை என்னுள் விதைத்த விழுமியத்திற்கு அமைவாக வீட்டுக்குப் போனேன்.    ராஜபக்ஸ  செய்ததைபோன்று சட்டத்தை மாற்றி இன்னமும் பல தடவைகள் ஆட்சியில் இருக்க முயற்சிக்குமாறு என்னோடிருந்த பலரும் எனக்கு ஆலோசனை கூறினர். நானோ,  "சீ இது என்ன கெட்ட வேலை'' எனக் கூறினேன்.   நான் ஒரு ஜனநாயகவாதி. இரு தடவைகள் ஆட்சியில் இருந்தேன். அது போதும் என அந்த யோசனைகளை நிராகரித்து வீடுசென்றிருந்தேன். எனக்குத் தேவையாக இருந்திருப்பின் பணத்தைக் கொடுத்து சாராயத்தைக் கொடுத்து சோற்றுப்பார்சல்களைக் கொடுத்து இவர்கள் கொண்டுவந்தது போன்று ஆயிரம் மடங்கு மக்களைக் கொண்டுவந்திருக்க முடியும். அப்படி கெட்டவேலை செய்ய எனக்கு முடியாது. அந்த எண்ணம் என்னுடைய எண்ணத்திலோ உடலிலோ கிடையாது.    என்ன இந்த விளையாட்டு?    போரை வென்றார்கள். தேர்தலில் அந்தக் கூட்டம் தோல்வியடைந்துள்ளது. இன்னுமொரு தரப்பினர் வெற்றிபெற்றுள்ளனர். நாட்டிலிருந்த கள்ளத்தனம், ஊழல்கொலைக்கலாசாரம், சுதந்திரத்தைப் பறித்தெடுத்தல், மக்களுக்கு சுதந்திரமில்லாமை ஊடக சுதந்திரம் இன்மை போன்ற காரணங்களால் இவை மீண்டுமாக தமக்கு வேண்டும் என இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் தேர்தலில் தமக்கு விரும்பிய தரப்பினரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.    இந்த அரசிற்கு அதன் வேலையை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்கின்றார்களில்லை..  
"தற்போதேனும் போர் வெற்றியின் பயனை இந்த நாட்டுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு எமக்கு முன்பாக பெரும் சவால் உள்ளது. ஒரு பக்கத்தில் அரச அதிகாரிகள். முதலில் அரசியல்வாதிகளைக் குறிப்பிடவேண்டும்.    ஆம். நாடாளுமன்றத்திலிருந்து மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என அனைத்து தரப்பிலும் ஊழல் தலைவிரித்தாடுகின்றது.

நீ ஐம்பது வீதம் எடுக்காமல் கொமிஸன் பெறாமல் அதனைச் செய்யவேண்டாம் என்று பெரிய பதவிகளிலுள்ளவர்கள் கூறுகின்றனர்.    பிரதேச சபையினரோ நூற்றுக்கு 20 வீதம் கொமிஸன் எடுக்கும்படி நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். மேலிருந்து கீழ்வரை ஊழல் தலைவிரித்தாடுகின்றது. பிரதேச சபைமாகாண சபை, நாடாளுமன்றம் என அனைத்துத் தரப்பினருமே கள்வர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் நாட்டை முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு?'' எனவும் அவர் கேள்வியயழுப்பி உரை நிகழ்த்தியுள்ளார்

நைஜீரிய ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முஹம்மது புகாரி ஆட்சியை பிடித்தார்


நைஜீரிய ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்

முஹம்மது புகாரி ஆட்சியை பிடித்தார்

நைஜீரியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் முதன் முறையாக அந்நாட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி குட்லக் ஜோனாதன், தன்னை வீழ்த்திய எதிர்க்கட்சி வேட்பாளரான முஹம்மது புகாரிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குட்லக் ஜோனாதனை விட முஹம்மது புகாரி 27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. அங்குள்ள பல மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளதாக அந்நாட்டு தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்ட போதிலும், தேர்தல் பார்வையாளர்கள், நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றதாக கூறியுள்ளனர்.
தேர்தல் அமைதியாகவும், நியாயமான வகையிலும், சுதந்திரமான முறையிலும் நடைபெறும் என வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதிகள் உண்மை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என குட்லக் ஜோனாதன் அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளார். புகாரிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் ஜோனாதன் குறிப்பிட்டுள்ளார். புகாரியின் அனைத்து முற்போக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவரும் ஜோனாதனை பாராட்டியுள்ளார்.

தனது நடவடிக்கையின் மூலம் ஹீரோவாக என்றும் மனதில் இடம்பிடித்திருப்பார் ஜோனாதன். இனி பதட்டம் தானாக முடிவுக்கு வந்துவிடும் என்றும் அந்த செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார். போகோஹாரம் தீவிரவாதிகளின் தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட போர்னோ மாகாணத்தில் மட்டும் புகாரிக்கு 94 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.