Monday, March 2, 2015

கிழக்கு மாகான சபை உறுப்பினர்கள் குழு இரா.சம்பந்தனுடன் பேச்சு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்
கிழக்கு மாகான சபை உறுப்பினர்கள் குழு

இரா.சம்பந்தனுடன் பேச்சு

கிழக்கின் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கிழக்கு மாகான சபை உறுப்பினர்கள் குழு ஒன்று சற்று முன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டும் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக  நம்பகமாக தெரிவிக்கப்படுகிறது .

கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமத் நியமனம் செய்வதற்கு வழங்கிய ஆதரவை மீளப்பெறுவதாக இன்று அறிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களான உதுமாலெப்பை அடங்கிய 6 உறுப்பினர்களுடன் முன்னாள் கிழக்கின் முதல் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான் )அவர்களும் இந்த சந்திப்பில்  கலந்து கொண்டார்.



No comments:

Post a Comment