Monday, March 2, 2015

வயிறு ஒட்டி பிறந்த ஏமன் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டன

சவூதியில் 9 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்
வயிறு ஒட்டி பிறந்த ஏமன் இரட்டை குழந்தைகள்

அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டன



ஏமன் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதிக்கு பிறந்த வயிறு ஒட்டிய இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.
ஏமன் நாட்டில் இருந்து ரியாத்துக்கு கொண்டு வரப்பட்ட அந்த குழந்தைகளுக்கு மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் சுமார் 9 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டியிருந்த சிறுநீரகம், இடுப்பு எலும்பு என அனைத்தும் பிரிக்கப்பட்டு தற்போது இரு குழந்தைகளும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment