Wednesday, April 29, 2015

கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய விண்கலம் எங்கு விழுமோ என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள்

கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய விண்கலம்
எங்கு விழுமோ என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள்

ரஷ்யா அனுப்பிய ஆளில்லாத விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூவியீர்ப்பு சக்தியின் மூலம் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதால், அந்த விண்கலம் எங்கு விழுமோ என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்களுன் ஆளில்லா விண்கலம் ஒன்றை ரஷ்யா அனுப்பியது. ஆனால் பாதி வழியிலேயே விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பாதக அறிவிக்கப்படுகின்றது.

இது பூமிப்பரப்பில் விழுந்தால் மிகப்பெரிய சேதம் ஏற்படும் என்பதால், அதனை கடலில் விழ வைக்கும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment