Thursday, April 2, 2015

சிகிரியா குகை ஓவியத்தில் பெயர் எழுதிய  உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

சிகிரியா குகை ஓவியத்தில் பெயர் எழுதிய 
உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

சிகிரியா குகை ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட யுவதியான உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.   
சுற்றுலா சென்ற சமயம் சிகிரியா குகை ஓவியத்தல் தனது பெயரை எழுதியமைக்காக கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, சிகிரியாவிலுள்ள  அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அனுராதபுரம் சிறையில் இருக்கும் இந்த யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் என்பன ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இவருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நேற்று புதன்கிழமை இரவு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.
சிகிரியா குன்றிலுள்ள சுவரோவியத்தில் தனது  பெயரை எழுதியமையினால் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள உதயசிறிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment