Sunday, July 26, 2015

தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஏ.எம்.ஜெமீல் நியமனம் பெறுவார் உறுதிபடக் கூறுகின்றார் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஏ.எம்.ஜெமீல் நியமனம் பெறுவார்

உறுதிபடக் கூறுகின்றார் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

எமது கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக .எம்.ஜெமீல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவிருக்கிறார். அந்த அதிகாரத்தின் மூலம் சாய்ந்தமருதின் அனைத்து தேவைகளையும் அவர் நிறைவேற்றித் தருவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மகாநாடு 25.07.2015 ஆம் திகதி சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதி அமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காகிரஸின் தேசிய அமைப்பாளருமான .எம்.ஜெமீல் மற்றும் கட்சியின் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சியின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் கிடைக்கவுள்ள தேசியப் பட்டியல் ஆசனங்களுள் ஒன்றை எமது கட்சியின் எழுச்சிக்காக தன்னை அர்ப்பணித்துள்ள மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்களுக்கு வழங்குவதற்கு கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.



No comments:

Post a Comment