Friday, August 28, 2015

நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய?

நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய?


புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கரு ஜயசூரியவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவரும், பிரதி சபாநாயகராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் வழங்கப்படும் என ஊகங்கள் எழுந்துள்ளன.

அதன்படி சபநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தெரிவு குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

No comments:

Post a Comment