Tuesday, September 1, 2015

நெல் மூட்டைகளுடன் முதலாவது லொறி மத்தல சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்


நெல் மூட்டைகளுடன் முதலாவது லொறி

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்



மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான சூழ்நிலையொன்று காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்ற.
 மத்தல ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தை நெற்களஞ்சியசாலையாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக, விமான நிலைய சேவையாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது
நெல் மூட்டைகளுடன் முதலாவது லொறி, மத்தல விமான நிலையத்தை இன்று 2ஆம் திகதி  புதன்கிழமை காலை அடைந்தபோதே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்தல ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தில் மாத்திரம் 20 கோடி ரூபாய் பெறுமதியான எக்ஸ்ரே ஸ்கனிங் இயங்திரங்களும் அதிக தொழில்நுட்பம் தீயணைப்பு கருவிகளும், 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குளிர் சாதன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்கு என 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி  செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் செல்வ வளத்தை பழிவாங்கும் வகையில் செயல்பாட்டுகளில் இறங்காதீர்கள்  என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.  

No comments:

Post a Comment