Wednesday, November 4, 2015

தெற்கு சூடானில் விமான விபத்து 41 பேர் பலி ( படங்கள் )


தெற்கு சூடானில் விமான விபத்து
41 பேர் பலி

தெற்கு சூடானின் தலைநகர் ஜூபா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சரக்கு விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில், விமானத்தில் சென்றவர்கள் எத்தனை பேர், விமானம் விழுந்த இடத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் சென்றவர்களில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில சமயங்களில் தெற்கு சூடானில் சரக்கு விமானங்கள் கூட பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.










No comments:

Post a Comment