Monday, November 30, 2015

கல்முனை ஸாஹிறாக் கல்லூரிபழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் – 2015 (படங்கள்)

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்

கொழும்புக் கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் -2015

Annual General Meeting Kalmunai Zahira College Colombo Branch 2015


கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் – 2015, கல்விமான் மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் நினைவலைகள் புத்தக வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நேற்று 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம்.எச்.கே. ஸனுஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற போது....





















Sunday, November 29, 2015

வாழ்விடங்களை இழந்த முஸ்லிம்களுக்கான நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தின் அவலநிலை பாரீர்

வாழ்விடங்களை இழந்த முஸ்லிம்களுக்கான

நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தின் அவலநிலை பாரீர்

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வாழ்விடங்களை இழந்த முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான், நுரைச்சோலை வீட்டுத் திட்டம். சவூதி அரேபியாவின்நன்கொடை நிதியம்இதற்காக, இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 552 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியது.
கிட்டத்தட்ட 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள், வைத்தியசாலை, சந்தைக் கட்டடத் தொகுதி, ஆண்பெண் பாடசாலைகள், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் மற்றும் பஸ் தரிப்பிடங்கள் என்று, அனைத்தும் உள்ளடங்கிய ஒருகுட்டி நகரம்தான் நுரைச்சோலை வீட்டுத் திட்டம்
 இன்று அந்த குட்டி நகரம் காடு பிடித்து, சேதமடைந்து, விலங்குகளின் உறைவிடமாக மாறியிருக்கிறது நுரைச்சோலை வீட்டுத் திட்டம். இங்குள்ள கட்டிடங்களில் இருந்த பெறுமதியான பொருட்கள் கூட களவாடப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் நியமிக்கபட்டுள்ளார்இப்போது, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களென்று, முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மூவர் மட்டுமே இம்மாவட்டத்தில் உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஆளுந்தரப்பில்தான் உள்ளது. அதுமாத்திரல்லாமல், அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.





Saturday, November 28, 2015

அம்பறை மாவட்ட அரசியல் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் வசம்!. நுரைச்சோலை வீடுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்படுமா?


அம்பறை மாவட்ட அரசியல் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் வசம்!

நுரைச்சோலை வீடுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்படுமா?


மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களுக்கு பின்னர் அம்பறை மாவட்டத்தின் அபிவிருத்தி குழுத் தலைவராக சிறுபான்மையைச் சேர்ந்த அதுவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளமை எமது கட்சிக்கும், மக்களுக்கும் கிடைத்த கௌரவமாகும் என எடுத்த எடுப்பிலேயே பாராட்டுவது கட்சியை நம்பி வாக்களித்த மக்களை ஒரு போதும் திருப்திபடுத்திவிட முடியாது என்பது கட்சியை நம்பி வாக்களித  மக்கள்ளின் கருத்தாகும்.
அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் இன்று முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் கிடைக்கப்பெற்றமை கட்சியினதும் தனிப்பட்ட ஒரு நபரின் பெருமையாகப் பேசிக்கொண்டிராமல் இந்த அதிகாரத்தைகொண்டு பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு  குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வாழ்விடங்களை இழந்த முஸ்லிம் மக்களுக்காக சவூதி அரேபியாவின்நன்கொடை நிதியத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்படல் வேண்டும். என்பதுதான் கட்சியினுடையதும் அதிகாரம் கிடைக்கப் பெற்றிருப்பவரினதும் தலையாய கடமையுமாகும் எனக் கூறப்படுகின்றது.
இந்த நல்ல காரியத்தை அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் நியமனம் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் செய்வாரா? என கட்சியின் அம்பாறை மாவட்ட ஆரம்பகால (மூத்த போராளிகள்) ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.

வாழ்விடங்களை இழந்த முஸ்லிம்களின் நுரைச்சோலை வீட்டுத் திட்டம்
=====================================================================
அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வாழ்விடங்களை இழந்த முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டது, நுரைச்சோலை வீட்டுத் திட்டம். சவூதி அரேபியாவின்நன்கொடை நிதியம்இதற்காக, இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 552 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள், வைத்தியசாலை, சந்தைத் தொகுதி, ஆண்பெண் பாடசாலைகள், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் மற்றும் பஸ் தரிப்பிடங்கள் என்று, அனைத்தும் உள்ளடங்கிய ஒருகுட்டி நகரம்இன்று அந்த குட்டி நகரம் காடு பிடித்து, சேதமடைந்து, விலங்குகளின் உறைவிடமாக மாறியிருக்கிறது நுரைச்சோலை வீட்டுத் திட்டம். இங்குள்ள கட்டிடங்களில் இருந்த பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் நியமிக்கபட்டுள்ளார்இப்போது, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களென்று, முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மூவர் மட்டுமே உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஆளுந்தரப்பில் உள்ளது. மட்டுமன்றி, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. எனவே, நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டிய முழுப்பொறுப்பினையும் முஸ்லிம் காங்கிரஸ்தான் முன்னின்று மேற்கொள்ள வேண்டும். அது அந்தக் கட்சியினுடைய கடமையும் பொறுப்புமாகும்.
நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரம் தொடர்பில் முஸ்லிம்.காங்கிரஸ் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என, சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதற்குப் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது,
 ‘நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று உள்ளது. எனவே, இது தொடர்பில் சட்ட ரீதியான சில செயற்பாடுகளை முதலில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பின்னர், நுரைச்சோலையிலுள்ள வீடுகளை நிச்சயமாக உரிய பயனாளிகளுக்கு நாம் பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இன்னும் சில காலம், நுரைச்சோலை வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் இழுத்தடிப்பு நிகழுமானால், பிறகுஅந்த வீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தவே முடியாததொரு நிலை உருவாகி விடும் என மக்களால் கவலை வெளியிடப்படுகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே, இவ்விவகாரத்தில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் என்ற அதிகாரம் கிடைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேகமாகச் செயற்பட வேண்டும் என்பதே கட்சிக்கு வாக்களித்த மக்களின் விருப்பமாகும்.
எனவே, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக நியமனம் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வாழ்விடங்களை இழந்த முஸ்லிம் மக்களுக்காக சவூதி அரேபியாவின்நன்கொடை நிதியத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்துக்கு தீர்வு கண்டு  வீடுகள் உரியவர்களுக்கு சீக்கிரத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டால் மாத்திரமே கட்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூருக்கும் கிடைத்திருக்கும் அரசியல் அதிகாரத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்மையும் பெருமையும் உள்ளதே தவிர  மக்களுக்கு விடிவு கிடைப்பதற்கு செயலாற்ற முடியாத பதவிகளால் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை ன்பதே அரசியல் நடுநிலையாளர்களின்  கருத்தாகும்.
அம்பறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக அரசியல் அதிகாரம் பெற்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் எவ்வாறு செயலாற்றப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.










Friday, November 27, 2015

நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து அசத்திய பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்

நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து
அசத்திய பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்

ஆபிரிக்க நாடான காபோன் தலைநகர் லிப்ரெவில் இருந்து பாரிஸ் நகரம் நோக்கி பறந்த விமானத்தில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் பிலிப்பே தூஸ்த் பிளேசி பிரசவம் பார்த்து அசத்தியுள்ளார்.
கபோனின் தலைநகர் லிபர்வில்லில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று, பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது, நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருந்தால் பிரசவம் பார்க்க உதவுமாறு அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் பிலிப்பே தூஸ்த் பிளேசி தானாக முன்வநது அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். சுக பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. விமானம் அல்ஜீரியா வான்வெளியில் பறந்தபோது குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்படுகின்றது.

2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை பிரான்ஸின் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர் பிலிப்பே தூஸ்த் பிளேசி. இவர் இதய நோய் மருத்துவராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில்


இன்று 27 ஆம் திகதி மோல்டா பிர்குவில் உள்ள போட்ஸ் சென் ஏஞ்சலோவில் ஆரம்பமான  பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில்.........



ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுநலவாய அரச தலைவர்களை வரவேற்றார்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
பொதுநலவாய அரச தலைவர்களை வரவேற்றார்

இன்று 27 ஆம் திகதி மோல்டா பிர்குவில் உள்ள போட்ஸ் சென் ஏஞ்சலோவில் ஆரம்பமான  பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு வருகை தந்த நாட்டுத் தலைவர்களை  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் வரவேற்பதைக்காணலாம்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவியை மோல்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட் அவர்களிடம் கையளிப்பார்.






முஹம்மது சியாம் கொலை அறுவருக்கும் மரண தண்டனை

முஹம்மது சியாம் கொலை
அறுவருக்கும் மரண தண்டனை



கோடீஸ்வர வர்த்தகரான மும்மது சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம்  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது