Thursday, December 31, 2015

டுபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம் (படங்கள்)

டுபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட  விபரீதம்

டுபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் டுபாய் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்னர்.
ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான டுபாயில் உள்ள உலக அளவில் பெரிய கட்டிடம் ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 20-வது மாடியின் வெளிப்புறத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மேலிருந்து கீழ் வரை தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டம் போல் காட்சி அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன..
விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று டுபாய் பாதுகாப்பு துறை தலைவர் மேஜர் ஜெனரல் ரஷெத் அல்-மத்ருஷி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டுபாயில் 830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 160 அடுக்குமாடி கட்டிடத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டிற்கு முன்பாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.







"கெளாரவ" கெளரவம் வழங்கப்பட்டிருக்கும் சபை உறுப்பினர்கள்!

கெளாரவ கெளரவம் வழங்கப்பட்டிருக்கும்
சபை உறுப்பினர்கள்



பிரதேச சபையில் உறுப்பினர்களாக பதவி வகித்த சிலருக்கு கெளாரவ கெளரவம் வழங்கி அவர்களின் புகைப்படங்களை பிரதேச சபை ஒன்றின் கேட்போர் கூடத்தில் மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் மொழி பேசும் பிரதேசமான நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில்தான் இப்படி கெளாரவ கெளரவம் வழங்கப்பட்ட சில பிரதேச சபை உறுப்பினர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கெளாரவ என்றால் அது எப்படிப்பட்ட கெளரவம் என்பதை நிந்தவூர் பிரதேச சபை நிர்வாகம் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு விளக்கமாகக் கூறமுடியுமா?  
இந்த சொல்லை அகராதியில் கெளரவம் என்ற சொல்லுக்கு பதிலாக சேர்க்க வேண்டுமா? தமிழ் பாடப் புத்தகத்திலும் மாணவர்களுக்காக புதிதாகப் பதிப்பிக்க  வேண்டுமா? என்பதையும் நிந்தவூர் பிரதேச சபை  நிர்வாகம்தான்  கூறவேண்டும்.


சம்மாந்துறையில் இன்று 31 ஆம் திகதி துக்கம் விஷேட (துஆ) பிரார்த்தனையும் செய்யப்பட்டது (படங்கள்)

சம்மாந்துறையில் இன்று 31 ஆம் திகதி துக்கம்
விஷேட (துஆ) பிரார்த்தனையும் செய்யப்பட்டது


கொழும்புகண்டி பிரதான வீதியிலுள்ள வறக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதெனிய எனுமிடத்தில், நேற்று (30.12.2015)  புதன்கிழமை காலை 4.45 மணியளவில் இடம்பெற்ற கொடூர வாகண விபத்தில் மரணமடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களின் இழப்பினால் அக்குடும்பத்தினர் மாத்திரமன்றி சம்மாந்துறை மக்கள் உட்பட நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இவ்விபத்தில் வபாத்தானவர்களுக்காக இன்று 31.12.2015 வியாழக்கிழமை சம்மாந்துறை முழுவதும் துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது
சம்மாந்துறை வாழ் மக்கள் அனைவரும் தங்கள் வர்த்தக நிலையங்கள்  சில்லறைக் கடைகள், அரச, தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவணங்கள் என்பனவற்றை மூடி இன்று விபத்தில் வபாத்தானவர்களுக்காக தனியாகவும் கூட்டாகவும்( துஆ )  பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இன்று சம்மாந்துறையில் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்து வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.

சம்மாந்துறை நம்பிக்கையாளர்கள் சபையினரின் ஏற்பாட்டில் சகல பள்ளிவாசல்களிலும் தொழுகையின் பின்னர் விபத்தில் மரணித்தவர்களுக்காக விஷேட (துஆ) பிரார்த்தனையும் செய்யப்பட்டது,

தகவல் - சம்மாந்துறை அன்சார்.







விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஹக்கீம் அனுதாபம்!

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு

அமைச்சர் ஹக்கீம் அனுதாபம்!


உம்ரா பயணத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக சம்மாந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வரக்காபொளை பிரதேசத்தில்; இடம்பெற்ற அகோர வாகன விபத்தில் உறவினர்கள் ஆறு பேர் காலமான செய்தியை அறிந்து தாம் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும்; நீர்வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த துக்ககரமான சம்பவம் குறித்து அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
புனித மக்காவுக்கு செல்லும் நல்ல நோக்கத்துடன் அதற்கு உரிய ஏற்பாடுகளை கவனிப்பதற்காக கொழும்புக்குச் சென்றுக் கொண்டிருந்த வேளையில், குழந்தைகள் உட்பட சம்மாந்துறையைச் சேர்ந்த அறுவர் இவ்வுலக வாழ்க்கையை துறக்க நேர்ந்த சம்பவத்தினால் சம்மாந்துறையில் மட்டுமல்லாது, பொதுவாக நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இத்துயரத்தில் தனிப்பட்ட முறையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் நானும் பங்குகொள்ளுகின்றேன். அத்துடன், இவ்வுலக வாழ்வு நிரந்தரமற்றது என்ற காரணத்தினால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த சோக முடிவினை தாங்கிக்கொள்கின்ற மனவலிமையை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஏனையோர் சுகமடையவும், மரணமானவர்கள் மேலான சுவன வாழ்வை அனுபவிக்கவும் அல்லாஹ்வை இறைஞ்சுகின்றேன்.
விபத்தில் வபாத்தானவர்கள்.

விபத்துக்குள்ளான  வண்டி

அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸர தேரரின் 100 ஆவது பிறந்தநாள் வைபவத்தில்

அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸர தேரரின்
100 ஆவது பிறந்தநாள் வைபவத்தில்

ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்கேற்பில் இன்று 31 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் உட்பட பிரமுகர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றிருந்தனர்.






Wednesday, December 30, 2015

வறக்காபொல தும்மலதெனிய எனுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தோர் விவரம் (படங்கள்)

வறக்காபொல தும்மலதெனிய எனுமிடத்தில் ஏற்பட்ட

விபத்தில் மரணமடைந்தோர் விவரம்


கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள வறக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதெனிய எனுமிடத்தில், நேற்று புதன்கிழமை காலை 4.45க்கு இடம்பெற்ற பாரிய விபத்தில் அறுவர் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்துள்ளவர்களில்.இரு குழந்தைகள்மூன்று பெண்கள்ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர்.
சம்மாந்துறையிலிருந்து கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த வானும், பிலியந்தலையிலிருந்து சோமாவதிக்கு யாத்திரீர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த பஸ்ஸும் மோதியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சம்மாந்துறையிலிருந்து அவர்கள் வானில், சென்றுள்ளனர். சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும், வானில் பயணித்தவர்கள். சம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள்.
மரணமடைந்தவர்களின் பெயர்கள்
வயது
எம்.எச்.ஐ.அஹமத் (சாரதி)
29
முஹம்மது இப்றாஹீம் ஹபீபத்துன்னிஸா
67
உதுமாலெப்பை நுஸ்ரத் ஜஹான்
27
சின்னத்தம்பி பாத்திமா பரூசா
25
சிராஜ் பாத்திமா ஸாலா
2 1/2
பாத்திமா நுஸ்ரா
2









மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு - 2015

மலரும் மொட்டுக்கள்  

முன்பள்ளி மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு - 2015

கல்முனை மாடர்ன் முன்பள்ளி மாணவர்களின் மலரும் மொட்டுக்கள் பிரியாவிடை நிகழ்வு 27.12.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் கல்முனை அல் பஹுரியா மகா வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் மாடர்ன் முன்பள்ளி அதிபர் ஜனாபா. ஜெஸ்மின் உதுமாலெப்பை அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சமூக சேவகருமான கௌரவ .எம்.பரகத்துல்லாஹ் மற்றும் கௌரவ அதிதிகளாக பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.. அப்துர் ரசாக் மற்றும் சமூக சேவகரும் கிராம அபிவிருத்திக் குழு தலைவருமான ஜனாப் எம்.எம்.ஜமால்டீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதி கௌரவ .எம்.பரகத்துல்லாஹ் உரையாற்றும்பொழுது முன் பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் அர்பணிப்பு மிக்க சமூகத்தின் உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்யும் முன்பள்ளி ஆசிரியர்கள் எமது பிராந்திய சிறுவர்களின் எதிர்காலம் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக தமது பிரதம உரையை நிகழ்த்தினார்.

இறுதியாக அதிதிகளால் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் அனைவரும் பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







தமிழ்நாடு கீழக்கரையில் இடம்பெற்ற மீலாத் விழா சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் ஏ.ஏ .அலி அஹமது (ரஷாதி) அமீர் இஸ்மாயில் (Ameer Ismail) தமிழ்நாடு

தமிழ்நாடு கீழக்கரையில் இடம்பெற்ற மீலாத் விழா

சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் ஏ.ஏ .அலி அஹமது (ரஷாதி)

அமீர் இஸ்மாயில் (Ameer Ismail) தமிழ்நாடு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா நேற்று  29 ஆம் திகதி செவ்வாய்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளல் சீதக்காதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராக ஸ்ரீ லங்காவைச் சேர்ந்த மெளலவி அஷ்ஷெய்க் ..அலி அஹமது (ரஷாதி) கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.

மெளலவி அல்ஹாஜ் எப்.ஸிராஜுத்தீன் அஹமது (ரஷாதி) ஸ்தாபகர், முதல்வர், தாருல் உலும்  ஸஉதிய்யா அரபுக் கல்லூரி சிந்தாமணிப்பட்டிஅல்ஹாஜ் எம் சம்சுத்தீன் (காஸிமி) தலைமை இமாம், மக்கா மஸ்ஜித் சென்னை. ஆகியோரும் இவ்விழாவில் உரை நிகழ்த்தினார்கள் என அறிவிக்கப்படுகின்றது..



முகத்தில் அதிக மேக்-அப் அந்தப் இளம் பெண்ணுக்கு பஸ்ஸில் நேர்ந்த கதி

முகத்தில் அதிக மேக்-அப்
அந்தப் இளம் பெண்ணுக்கு பஸ்ஸில் நேர்ந்த கதி

அதிகமாக ஒப்பனை (மேக்-அப்) செய்ததாகக் கூறி இளம் பெண்ணொருவர் பஸ்ஸில் இருந்து பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது இதுகுறித்து தெரியவருவதாவது,
கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற 15 வயது சிறுமி, இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்காம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பஸ்ஸில் இருந்த பெண் நடத்துனர், சஹ்ரா சாதிக்கின் சிறுமிகளுக்கான பயணச் சீட்டை வாங்கி பரிசோதித்துள்ளார்.
பின்னர் உன்னையும் உன் ஒப்பனையையும் பார்த்தால் சிறுமி போல் தெரியவில்லை என்று கூறி அந்த பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார்.
இது மாத்திரமல்லாமல் 35 பவுண்ஸ் அபராதமும் விதித்துள்ளார். தற்போது இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், அடையாள அட்டை எடுத்துச் செல்லாததால் எனது வயதை நிரூபிக்க முடியவில்லை. இருப்பினும் என்னுடைய பாடசாலை புகைப்படங்களை காட்டியபோதும் அதை நடத்துனர் நம்பவில்லை என்று கூறியுள்ளார்.