Tuesday, January 5, 2016

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

.பொ.. உயர்தரப் பரீட்சையில் மாவட்டத்தில்

மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!



கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட .பொ. உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் மூவர் அம்பாறை மாவட்டத்தில் மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

கணிதபிரிவில் என்.எம்.சாதிர் மூன்று பாடங்களிலும் அதி திறமைச்சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதல்நிலை மாணவனாக பொறியியல் துறைக்கும், புதிதாக அரசாங்கத்தனால் அறிமுகப்படுத்தப்பட்ட பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் எஸ்.எச்.எம்.சஜாத் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையிலும், உயிரியல் தொழில்நுட்ப துறையில் ஜே.ரீ.ஹிக்மத் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டு கல்முனை வலயத்திற்கும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment