Tuesday, March 29, 2016

80 பயணிகளுடன் விமானம் கடத்தல்! உலக நாடுகள் அதிர்ச்சி!!

80 பயணிகளுடன் விமானம் கடத்தல்!
உலக நாடுகள் அதிர்ச்சி!!



எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து கெய்ரோ சென்ற விமானம் (Airbus A320) 80 பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கெய்ரோ நோக்கிச் சென்ற எகிப்து ஏர் விமானம் 80 பயணிகளுடன் சைப்ரஸுக்கு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் விமான குழுவினர் உட்பட 81 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவலில் பயணிகள் விமானத்தை மர்ம கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாகவும், தற்போது ஐரோப்பாவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைப்ரஸில் உள்ள Larnaca என்ற விமான நிலையத்தில் அந்த விமானம் உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியதும் அதில் ஒரு நபர் ஆயுதம் ஏந்தி உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளை தற்போது வெளியேற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை எகிப்து நாட்டு வான்வெளி போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

மேலும், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தை கடத்தியவர்களும் வெடிகுண்டுகள் கட்டிய உடுப்புகளை அணிந்தவாறு விமானிகளை மிரட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.



No comments:

Post a Comment